பொன் நிறத்தில் பொசுபொசு என்றிருந்த அந்த ஏழுமாத நாய்க்குட்டியை தன் மடியில் வைத்து ஆசையாய் வருடினான் ராகுல். அடிக்கடி பார்த்து பழகிய நபர் என்பதால் உரிமையாய் அவன் மடியில் தலை சாய்ந்து தன் சொர சொரப்பான நாவால் அவனை வருடி பைரவனும் தன் அன்பை வெளிப்படுத்தியது. சின்னதாய் இருந்த இரண்டு முன்னங்கால்களாலும் அவனது கரம் பற்றி பொய்யாய் கடித்து விளையாடியது.
“டேய் சதீஷ்! இந்த பைரவனை எனக்கு தந்திடுறியா? உனக்கு எவ்வளவு காசு வேணாத் தர்றேன்”- ராகுல் ஆசையாய்க் கேட்க, தன் சைக்கிளை பழுது பார்த்துக் கொண்டிருந்த சதீஷ் நிமிர்ந்தான்.. இதோடு மூன்றாவது முறையாய்க் கேட்கிறான். உற்ற நண்பன்தான்! அவனுக்காக எதையும் கொடுக்கலாம். ஆனால் பைரவனை எப்படி? பைரவன் தன் உயிரல்லவா?”
“ஸாரி ராகுல்! பைரவன் நான் இல்லாம சாப்பிடாது. பால் குடிக்காது. உனக்கு நான் ஏதாவது நாய்க்குட்டி கிடைச்சா தர்றேன்.”
“இல்லடா! பைரவனைத் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! என்ன கலர் பாரேன்… முடியெல்லாம் எவ்வளவு ஷைனிங்கா இருக்கு? ஸோ ஸாப்ட்! பையு! எங்க வீட்டுக்கு வர்றியா? உனக்கு பெடிகிரி… சிக்கன்… மட்டன் எல்லாம் தர்றேன். என்கூட ஏ.சி. ரூம்ல தூங்கலாம். வர்றியா? ராகுல் பைரவனின் தலையை வருடியவாறே கேட்க, அது தன் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தது. அவனது கேள்வி புரிந்ததோ என்னவோ.. வேகமாய் அவனது மடியிலிருந்து குதித்து சதீஷிடம் சென்று அவனை உரசிக் கொண்டு அவனது காலடியில் படுத்துக் கொண்டது.
“பாருடா! நான் கேட்டது அதுக்கு புரிஞ்சுது போலிருக்கு? கோவிச்சிட்டு உன் கிட்ட வந்திட்டான்” ராகுல் வியப்பாய் கேட்க, பெருமிதமாய் புன்னகைத்தான் சதீஷ்.
This story is from the February 16, 2023 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 16, 2023 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.