காங்கிரஸ் மூத்ததலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் புகுந்து இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ப.சிதம் பரத்தின் வீடு, அருகில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் இன்று காலை 7.30 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
டெல்லியில் இருந்து வந்திருந்த 14 சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் ஆகியவற்றுக்குள் ஒரே நேரத்தில் 2 குழுக்களாக பிரிந்து சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த பணியாளர்களிடம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் குறித்தும் விசாரித்தனர்.
சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
This story is from the May 17, 2022 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 17, 2022 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பின்னணி பாடகர் வேல்முருகன் கைது
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.
காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தீவிரம்
காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுக முகத்துவாரம் ரூ.4 கோடி செலவில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரத்தில் இலவச மருத்துவ முகாம்
விழுப்புரம் ஜெயின் சங்கம் புதுவை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து சரஸ்வதி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வள்ளல் சின்ன சுப்ராயப் பிள்ளைக்கு சிலை-முதலமைச்சரிடம் கோரிக்கை
என, வள்ளல் சின்ன சுப்ராயப் பிள்ளைக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும், 150வது நினைவு ஆண்டை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்ற 4வது கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு
தேர்தல் பணிகளில் 19 லட்சம் பேர் பங்கேற்பு
நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக் குறைவால் காலமானார்
நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும்.
அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் துவக்க நிலை மாணவர்களிடம் பாடத்திட்டங்களில் பாகுபாடு காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை விடுத்துள்ளது.
வெளி மாநில வாகனங்களுக்கு வரி விதிக்கக்கூடாது வன்னியர் இயக்க முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்
புதுச்சேரி வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவையில் வரும் வெளி மாநில வாகனங்களை, பேருந்துகளை மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங் களை நிறுத்தாமல், எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மீது வரி போடாமலும், எந்த ஒரு இடையூறு கொடுக்காமலும் இருக்க வேண்டும்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் செயல்பாடுகளை சிறப்பித்து அங்கீகரிக்கும் வகையிலும் அதற்கு சிறப்பாக பங்காற்றி வரும் துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமாரை கெளரவிக்கும் வகையிலும் பல்வேறு அமைப்புகள் மூலம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை
சென்னை, மே 10காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர்.