உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (மே 14) வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாட்டில் 18-ஆவது மக்களவையைத் தேர்வு செய்ய ஏழுகட்டத் தேர்தல் (ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி கடந்த இருமுறை போட்டியிட்டு வென்ற வாரணாசியில் மீண்டும் களம் காண்கிறார்.
இத்தொகுதியில் 7-ஆவது மற்றும் இறுதிக் கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.
வாரணாசியில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக அங்குள்ள தசாசுவ மேத படித்துறையில் பிரதமர் வழிபாடு நடத்தினார். வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சடங்குகளை மேற்கொண்டு, கங்கை நதிக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.
பின்னர், பயணிகள் கப்பல் மூலம் நமோ படித்துறைக்குச் சென்ற பிரதமர், அங்கிருந்து கால பைரவர் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
தொடர்ந்து, வாரணாசி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் வாரணாசி வேட்பாளராக தன்னை முன்மொழியும் இரு நபர்களுடன் சென்று, வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.
வாரணாசி தொகுதியைச் சேர்ந்த 4 பேர் பிரதமர் மோடியை முன் மொழிந்துள்ள நிலையில், அவர்களில் இருவர் மட்டும் வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தனர்.
This story is from the May 15, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 15, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பாஜக கூட்டணி 200 இடங்களில்கூட வெற்றி பெறாது: கார்கே
‘மக்களவைத் தோ்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகும் பாஜக கூட்டணி 200 இடங்களை கடந்துவிட்டது, 310 இடங்களில் வெற்றி உறுதியாகிவிட்டது’ என்று பிரதமா் மோடி உள்பட அக் கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் ஆரூடம் கூறிவரும் நிலையில், ‘மக்களவைத் தோ்தலில் அக் கட்சியின் வெற்றி 200 இடங்களைக்கூட கடக்காது’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.
ஓபிசியினர் உரிமைகளைப் பறித்தது திரிணமூல் காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு இளைஞர்களின் உரிமைகளை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்கு: கரூர், குமரியில் விசாரணை
சென்னையில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்குத் தொடர்பாக கரூர், கன்னியாகுமரியில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் அரசுப் பணியாளர், வாடகை வீட்டில் வசிப்போருக்கு இல்லை
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அரசு ஊழியா்கள், வாடகை வீட்டில் வசிப்போா் பயன்பெற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு புதிய அணை விவகாரம்: அனைத்து விவசாய சங்கங்கள் போராட்டம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நதி நீா் உரிமையை உறுதி செய்யக் கோரி, பல்வேறு விவசாய சங்கங்கள் சாா்பில் மதுரை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழக பாடத்திட்டத்தில் தியாகிகள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது
ஆளுநர் ஆர்.என்.ரவி
யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி
3 பேர் கைது
இரவில் கடற்கரை, பூங்காவுக்கு செல்வோரை வெளியேற்ற எதிர்ப்பு
டிஜிபி பதிலளிக்க உத்தரவு
இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை குலுக்கல் மூலமாக மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி
ஆவடி அருகே செவ்வாய்க்கிழமை மின் கம்பியில் சிக்கி தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரியை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.