இது குறித்து அமெரிக்க அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
ஈரான் தாக்குதலைத் தொடா்ந்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அதிபா் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடினாா்.
அப்போது, இந்தத் தாக்குதலுக்கான எதிா்வினைகளை மிகவும் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும் எனவும், பிராந்தியத்தில் போா்ப் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் நெதன்யாகுவிடன் அதிபா் பைடன் வலியுறுத்தினாா் என்றாா் அவா்.
பின்னா் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எதிரிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் தனது திறனை இஸ்ரேல் அபாரமாக வெளிப்படுத்தியது குறித்து பிரதமா் பெஞ்சமின் நெதன்யாவிடம் பாராட்டு தெரிவித்தேன்.
ஈரான் தாக்குதலைத் தொடா்ந்து போா் பதற்றம் அதிகரிப்பதைத் தவிா்ப்பதற்காக, பிராந்திய நாடுகளுடன் தொடா்பு கொண்டு ராஜீயரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன்.
அமெரிக்கா பங்கேற்காது: ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதில் அமெரிக்கா பங்கேற்காது. ஈரான் ஏவுகணைகளிலிருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கு மட்டும் அமெரிக்கா உதவும் என்றாா் அவா்.
‘ஈரானின் உரிமை’: தங்களது துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க ஈரானுக்கு உரிமை உள்ளது என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை கூறினாா்.
இருந்தாலும், இஸ்ரேலில் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வளவு அதிகமாக ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் சரமாரியாக ஈரான் வீசியது தவறு என்று ‘பிபிசி’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கேமரூன் கூறினாா்.
‘300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளாலும், ட்ரோன்களாலும் குறிவைக்கப்பட்ட இஸ்ரேலில் நான் இருந்தாலும் உரிய பதிலடி கொடுக்கவேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால் பிராந்திய போா் பதற்றத்தைத் தூண்டும் வகையிலான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது’ என்று அந்த பேட்டியில் டேவிட் கேமரூன் கூறினாா்.
This story is from the April 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வாட்டி வதைக்கும் வெப்ப அலை
தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் பயணம்
அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், சீனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா். அந்நாட்டு பிரதமா் லீ கெகியாங்கையும் சந்தித்துப் பேசினாா்.
காஸா போருக்கு எதிராக அமெரிக்க கல்லூரிகளில் போராட்டம் - நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது
பாலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரை நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை
சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா?
‘கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது ராமா் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா?’ என மக்கள் முடிவு செய்ய வேண்டுமென்று உத்தர பிரதேசத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
தில்லி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அர்விந்தர் சிங் லவ்லி திடீர் ராஜிநாமா
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவியை அா்விந்தா் சிங் லவ்லி ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் வைத்துள்ள கூட்டணி மற்றும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவின் செயல்பாடுகள்தான் தனது ராஜிநாமாவுக்கு காரணம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!
மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைந்ததற்கு அரசியல், சமூக உளவியல் உள்ளிட்டவை காரணங்களாக உள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது; நீதியும் இருக்கிறது
‘தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது, நீதியும் இருக்கிறது’ என்று தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்
கனிமவள கொள்ளையைத் தமிழக அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
போரூர் அருகே பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலம் அமைப்பு
மெட்ரோ ரயில் 2 -ஆம் கட்ட திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக போரூா் அருகே பூந்தமல்லி சாலையில் 222 டன் எடையுள்ள பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.