மேலும், 'கடந்த காலத்தில் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச் சாட்டுகளை சுமத்திய தலைவர்கள், இப்போது மோடிக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் கைகோத்துள்ளனர்' என்றும் அவர் விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலை யொட்டி, பிகாரில் பிரதமர் மோடி வியாழக்கிழமை (ஏப்.4) பிரசாரத்தைத் தொடங்கினார். ஜமுய் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவா தத்தை திறம்பட எதிர்கொள்ளத் தவறிய முந்தைய காங்கிரஸ் அரசுகளால் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. நம்மை பலவீன மான, ஏழ்மையான நாடு என்று உலகம் நினைத்தது.
தங்களுக்கான கோதுமை விநியோகத்தைப் பராமரிக்க போராடும் சிறிய நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருந்தது (பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டார்).
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பிற சக்திவாய்ந்த நாடுகளின் தலையீட்டை கோரியதைத் தவிர முந்தைய காங்கிரஸ் அரசுகள் வேறெதையும் செய்யவில்லை.
நமது நாடு பழம்பெருமை மிக்கதாகும். மகதப் பேரரசு போன்ற பலம்பொருந்திய ராஜ்யங்களையும், சந்திரகுப்த மௌரியர் போன்ற தலைசிறந்த பேரரசர்கள்ளையும் கொண்டிருந்தநாடு. அத்தகைய பெருமைமிக்க நாட்டுக்கு காங்கிரஸ் அவப்பெயரை தேடித்தந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.
உரிய பதிலடி: எதிரி நாடுகளின் சொந்தமண்ணில் அவர்களுக்கு உரிய பதிலடியைத் தரும் ‘புதிய இந்தியா'வை உலகம் காண்கிறது. நம்மை நாமே தற்காத்துக்கொள்கிறோம். முக்கியப் பிரச்னைகளில் இந்தியாவின் ஆலோசனையை உலக நாடுகள் எதிர் நோக்குகின்றன.
هذه القصة مأخوذة من طبعة April 05, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة April 05, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அமித் ஷாவை பிரதமராக்க மோடி திட்டம்-அரவிந்த் கேஜரிவால்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அடுத்த பிரதமராக்கும் திட்டத்துடன் தற் போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கூறினார்.
நாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து வழிநடத்துவார்
'மக்களவைத் தேர்தல் முடிவில், பாஜக ஆட்சியமைக்கும். பிர தமர் நரேந்திர மோடி நாட்டை தொடர்ந்து வழிநடத்துவார்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
மத்திய ராஃபாவிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் பாலஸ்தீனா்களின் கடைசி புகலிடமாகத் திகழ்ந்த ராஃபா நகரின் மத்தியப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்
பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் முழுமையான உறுப்பு நாடாக்க வழிவகுக்கும் தீா்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா
மும்பை இண்டியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
இந்திரா காந்தியிடம் பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து வீரம், துணிவு, மன உறுதி ஆகிய வற்றை தற்போதைய பிரதமரான மோடி கற்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பற்றி பொது விவாதம்: முன்னாள் நீதிபதிகளின் அமைப்பை ஏற்ற காங்கிரஸ்
மக்களவைத் தேர்தல் குறித்த பொது விவா தத்துக்கான ஓய்வு பெற்ற நீதி பதிகளின் அழைப்பை காங் கிரஸ் ஏற்பதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
பாஜக இல்லாத பாரதம்
நாட்டில் பாஜக இருக்கக் கூடாது என்று தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட எந்தக் காரணமும் இல்லை
‘இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, அரசுத் திட்டங்களில் அவா்களும் சமமாக பலனடைகின்றனா். எனவே, அவா்கள் பாதுகாப்பற்க உணர எந்தக் காரணமும் இல்லை’ என்றாா் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா்.
முருக பக்தர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
பழனியில் முருக பக்தா்கள் மாநாடு நடத்துவது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.