நமது சிறப்பு நிருபர்
பம்பரம் சின்னம் கேட்டு போராடுவது, கூட்டணி தலைமையுடன் முரண்பாடு எழாமல் உறவைக் காப்பது, நேரடி தேர்தல் கள அனுபவத்தை எதிர்கொள்வது, வாரிசு அரசியல் குற்றச்சாட்டை சமாளிப்பது என பன்முக அழுத்தங்களுக்கு மத்தியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார் மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ. தேர்தல் பிரசாரத்துக்கு இடையே தினமணிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து...
மதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள விருதுநகர் தொகுதியில் நிற்காமல் திருச்சி மக்களவைத் தொகுதியைத் தேர்வு செய்தது ஏன்?
1998, 1999 என தொடர்ந்து இரு முறை சிவகாசி தொகுதியில் எனது தந்தை வைகோ வெற்றி பெற்றார். 2004-இல் மூன்றாவது முறையாகவும் மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் வென்ற தொகுதி அது. ஆனால், தொகுதி மறுசீரமைப்பால் சிவகாசி தொகுதியே இல்லாமல் போனது. அதிலிருந்த பேரவைத் தொகுதிகளான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி எம்.பி. தொகுதிக்கும், கோவில்பட்டி தூத்துக்குடி எம்.பி. தொகுதிக்கும் சென்றுவிட்டன. சிவகாசி, சாத்தூர், விருதுநகரை உள்ளடக்கி விருதுநகர் எம்.பி. தொகுதி ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஒரு தொகுதி என்ற குறுகிய வட்டத்துக்குள் மதிமுக-வை அடைத்துவிடக் கூடாது.
வாரிசு என்பதால் மதிமுகவில் வெகு விரைவில் உங்களுக்கு உயர் பதவி கிடைத்து விட்டதாக சொல்கிறார்களே?
அரசியலுக்கு வரும் விருப்பமோ, ஆசையோ, வேட்கையோ எனக்குத் துளியும் கிடையாது. 2019 மக்களவைத் தேர்தலில் தந்தையின் சுற்றுப்பயணத்தையும், இதர தேர்தல் களப் பணிகளையும் நான் திட்டமிட்டு தொண்டர்களுடன் பணியாற்றினேன். அதனால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள், என்னை கட்சிப் பதவியில் அமர்த்த குரல் கொடுத்தனர். பெரும்பான்மை ஜனநாயகத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதால் வேறுவழியின்றி அவர்களின் கோரிக்கையை தந்தை ஏற்றுக் கொண்டார். நிர்வாகக் குழுவில் உள்ள 106 பேரில் 104 பேர் என்னை ஆதரித்தனர். பின்னர், கட்சியின் தலைமை நிலையச் செயலர் பதவி, பின்னர் முதன்மைச் செயலர் பதவி, இப்போது, திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் ஆக நிற்கிறேன்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது மதிமுக-வின் விருப்பப் பட்டியலில் திருச்சி இருந்ததா?
This story is from the March 27, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 27, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக?
பிரதமர் நரேந்திர மோடி சவால்
‘கோவிஷீல்டு' தடுப்பூசி சர்வதேச அளவில் வாபஸ்
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா வர்த்தக காரணங்களுக்காக தனது கரோனா தடுப்பூசியை (கோவிஷீல்டு) சர்வதேச அளவில் அனைத்து நாடுகளில் இருந்தும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45 புள்ளிகளை இழந்தது.
ராஃபா படையெடுப்பு விவகாரம் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்திய அமெரிக்கா
காஸாவின் ராஃபா நகரில் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து தாயகத்துக்கு 111.22 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.9.28 லட்சம் கோடி) அனுப்பி, உலக அளவில் இந்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பிரான்ஸ் வந்தடைந்தது பாரீஸ் ஒலிம்பிக் தீபம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக கீரிஸில் ஏற்றப்பட்ட தீபம், பிரான்ஸின் மாா்சியெல் நகரை புதன்கிழமை வந்தடைந்தது. பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் ஒலிம்பிக் தீபத்தை பிரான்ஸ் வரவேற்றது.
அபிஷேக், டிராவிஸ் அதிரடி: ஹைதராபாத் அபார வெற்றி
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
ஜாதி, மதம், கோயில்-மசூதி மட்டும்தான் பாஜகவின் பிரசார உத்தி
ரேபரேலியில் பிரியங்கா பிரசாரம்
சமூக வலைத்தள பதிவு விவகாரம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆஜராக பெங்களூரு போலீஸில் சம்மன்
வாக்காளர்களிடையே பகைமையை உருவாக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள பெங்களூரு போலீஸார், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஹரியாணா: பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸுக்கு ஆதரவு
ஜனநாயக ஐனதா கட்சி அறிவிப்பு