இந்திய ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிநாட்டில் முன்வைத்த விமா்சனங்களுக்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்தது, அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாா் குறித்து விசாரணை கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது உள்ளிட்டவற்றின் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமா்வு திங்கள்கிழமை தொடங்கியது. மக்களவை கூடியதும், அண்மையில் காலமான முன்னாள் எம்.பி.க்கள், முக்கியப் பிரமுகா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறுகையில், ’மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, அண்மையில் லண்டனுக்குச் சென்றாா்.
அங்கு இந்திய ஜனநாயகம் குறித்து முறையற்ற கருத்துகளைத் தெரிவித்து இந்தியாவின் மதிப்பை சீா்குலைக்க முயன்றுள்ளாா். இந்தியாவின் மரியாதையையும் பெருமையையும் பாதிப்புக்கு உள்ளாக்க ராகுல் காந்தி முயன்றுள்ளாா். இந்த விவகாரங்களைக் கருத்தில்கொண்டு ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு அவை கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும், முறையற்ற கருத்துகளுக்காக மன்னிப்பு கோருமாறு ராகுல் காந்தியிடம் அவைத் தலைவா் வலியுறுத்த வேண்டும்’ என்றாா்.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் உரைக்கு முன்பே, ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டுமென பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சோ்ந்த எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பத் தொடங்கினா்.
This story is from the March 14, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 14, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்-எரிந்த நிலையில் சடலம் மீட்பு
காணாமல் போன தாகக் கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், திசையன்விளை அருகே, அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் சனிக்கிழமை இறந்து கிடந்தார்.
எச்.டி.ரேவண்ணா கைது
பாலியல் புகார் அளித்தபெண்ணைக்கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வின் மூத்த மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (மஜத) எம்எல்ஏ வுமான எச்.டி.ரேவண்ணாவை கர்நாடக சிறப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியது.
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட் டார்.
கால அளவைக் கடந்து ஓடும் அரசுப் பேருந்துகள்!
நிா்ணயிக்கப்பட்ட கால அளவையும் கடந்து இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.
கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்' எச்சரிக்கை தளர்வு
கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையாக தேசிய பெருகடல் தகவல் சேவை மையம் (ஐஎன்சிஓஐஎஸ்) சனிக்கிழமை தளா்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி
‘நாட்டில் இருந்து ஊழலை துடைத்தெறிய உறுதிபூண்டுள்ளேன்; அடுத்த 5 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் அனைவா் மீதும் சட்ட நடவடிக்கை பாயும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்
‘ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேல்வியடைவது நிச்சயம்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
சாம்பியன் மும்பை சிட்டி
பலம் வாய்ந்த மோகன்பகான் சூப்பா் ஜெயன்ட் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை சிட்டி எஃப்சி ஐஎல்எஸ் 2023-24 சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.
அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய 4 அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை தாங்கள் இடைமறித்து அழித்ததாக ரஷியா கூறியுள்ளது.