இரண்டாம் உலகப் போரின் பேரழிவுக்குப் பிறகு அப்போதைய உலகத் தலைவர்கள் அமைதியின் வழியைக் கடைப்பிடித்ததைப் போல உக்ரைன் போர், கரோனா தொற்று பரவலுக்குப் பிந்தைய புதிய உலக கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு தற்போதைய தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாநாட்டின் ஒரு பகுதியாக உணவு-எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது:
பருவநிலை மாற்றம், கரோனா தொற்று பரவல், உக்ரைன் போரின் தாக்கம் உள்ளிட்டவை சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உணவுப் பொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருள்களுக்கு முழுவதும் தட்டுப்பாடு காணப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஏழைகள் சந்தித்து வரும் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க அவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
உலகம் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான நிதியாதாரம் ஏழைகளிடம் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் தோல்வியடைந்துள்ளதைத் தயக்கம் ஏதுமின்றி ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த அமைப்புகளில் போதிய சீர்திருத்தங்களைப் புகுத்துவதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறோம்.
This story is from the November 16, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 16, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கடினமான முடிவுகளை எடுத்தார் பிரதமர் மோடி
அமித் ஷா
பிஎஃப்ஐ அமைப்பு மீதான தடையை எதிர்க்கவில்லை: திக்விஜய் சிங்
பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டபோது அதை தான் எதிா்க்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேசத்தின் ராஜ்கா் தொகுதி வேட்பாளருமான திக்விஜய் சிங் தெரிவித்தாா்.
இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு
பள்ளிக் கல்வியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
மாநில தகவல் ஆணையர்
தமிழகத்துக்கு ரூ.276 கோடி, கர்நாடகத்துக்கு ரூ.3,454 கோடி
மத்திய அரசு நிவாரணம்
வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்ப அளவு வெள்ளிக்கிழமை பதிவானது. சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஏப்.30-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்
அமெரிக்கா முடிவு
ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்
செங்கடலில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பனாமா நாடியேற்றிய எண்ணெய்க் கப்பல் சேதமடைந்தது.
இஸ்ரேலின் போர் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேல் முன்வைத்துள்ள செயல்திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம்
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக் கோப்பை முதல் கட்ட போட்டியில் இந்தியா அணிகள் காம்பவுண்ட் பிரிவில் 4 தங்கம் வென்றது. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்றாா்.