பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடைய 7 அமைப்புகளுக்கு சட்டவிரோத நடவடிக் கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாகக் கூறி நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப் பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) கடந்த சில தினங்களில் இருமுறை சோதனை நடத்தி 350-க்கும் மேற்பட்ட நிர்வாகி களை கைது செய்திருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவுக்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிறப்பித்தது.
பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்புடைய ரீஹாப் இந்தியா ஃபவுண் டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில், தேசிய மனித உரிமை கூட்டமைப்பு, மகளிர் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம் ஃபவுண்டேஷன் பவர் இந்தியா அண்ட்ரீஹாப் ஃபவுண்டேஷன் கேரளம் ஆகிய அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பிஎஃப்ஐ அமைப்பின் நிறுவன உறுப்பினர்கள் சிலர் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவ அமைப்பின் (சிமி) தலைவர்களாகவும் இருந்துள்ளனர்.
This story is from the September 29, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 29, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்! பொதுமக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு சுமாா் 1 லட்சம் பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெற்ற மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றினாா்.
ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்
6 தமிழர்களை கடலோரக் காவல் படை கைது செய்து விசாரணை
'ஊழல்' பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்
‘ஊழல்வாதிகளிடமிருந்து விசாரணை அமைப்புகளால் பறிமுதல் செய்யப்படும் பணத்தை ஏழைகளுக்கு திருப்பித் தருவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகிறேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவர் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.
வளர்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்
உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
தலைமைத் தேர்தல் அதிகாரி
நீட் வினாத்தாள் கசியவில்லை: என்டிஏ விளக்கம்
இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) சோ்க்கைகான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் (நீட்) தோ்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், ‘அது முழுவதும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்’ என்று அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை மறுத்தது.
பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை
நாட்டின் கல்வித் தரத்தை சீா்க்குலைக்கும் வகையிலும் மாணவா்களின் சக்தியை வீணடிக்கும் வகையிலும் நாட்டின் வளா்ச்சியைத் தடுக்கும் வகையிலும் மக்களிடையே பிளவையும் பூசலையும் உருவாக்கும் வகையிலும் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகப் பொய் செய்திகளைப் பரப்பி மக்களை குழப்பத்தில் ஈடுபடுத்தி வருகின்றன சில அந்நிய சக்திகள்.
புயல், வெள்ள நிவாரணம் தமிழக அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு
தமிழகத்தில் ஏற்பட்ட புயல், கடும் மழை வெள்ள சேதாரத்திற்கு மத்திய அமைச்சகங்களுக்கிடையான குழு (ஐஎம்சிடி) விடம் தமிழக அரசால் சமா்பிக்கப்பட்ட நிவாரண நிதியை விடுவிக்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமா்வில் தமிழக அரசின் சாா்பில் திங்கள் கிழமை வலியுறுத்தப்பட்டது.