லும்பினி/கோரக்பூர், மே 16:
உலகம் முழுவதும் 2566-ஆவது புத்த ஜெயந்தி திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. முக்கியமாக, புத்தர் பிறந்த இடமான நேபாளத்தில் உள்ள லும்பினியில் கொண்டாட்டங்கள் களைகட்டின. புத்த பூர்ணிமாவையொட்டி அங்கு சர்வதேச பௌத்த மாநாடு நடைபெற்றது. நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா, அமைச்சர்கள், பௌத்த துறவிகள், ஆய்வாளர்கள், சர்வதேச விருந்தினர்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்துகொண்டனர். அதில் பங்கேற்ற பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான நல்லுறவானது இமயமலையைப் போல வலுவுடன் உள்ளது. அசாதாரண சர்வதேச சூழலில், இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் நட்புறவானது ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கும் பலனளித்து வருகிறது.
மனித சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான அடிப்படையாக புத்தரின் கொள்கைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள பௌத்த தலங்களான சாரநாத், புத்தகயை, குஷி நகரம் ஆகியவையும் லும்பினியும் நாடுகளுக்கிடையேயான பரஸ்பர கலாசாரத் தொடர்பை வலுப்படுத்துகின்றன. இந்த ஒத்துழைப்பு மேலும் வலுவடைய வேண்டும்.
நேபாளத்தில் லும்பினி அருங்காட்சியகத்தை இரு நாடுகளும் இணைந்து அமைத்து வருவது வலுவான ஒத்துழைப்பை வெளிக்காட்டுகிறது என்றார் அவர்.
This story is from the May 17, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 17, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் நடைபெற்றது.
பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி- ஜெர்மனி அறிவிப்பு
பாலஸ்தீனத்துக்கான ஐ.நா. பிரிவை (யுஎன்ஆா்டபிள்யுஏ) சோ்ந்த நூற்றுக்கணக்கானவா்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்திய குற்றச்சாட்டை இஸ்ரேல் நிரூபிக்காததால், அந்தப் பிரிவுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிதியுதவியை மீண்டும் தொடரப்போவதாக ஜொ்மனி அறிவித்துள்ளது.
குஜராத்தை 'த்ரில்' வெற்றி கண்டது டெல்லி
ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
வாக்காளர்கள் மீது பிரதமர் மோடிக்கு பயம்- மல்லிகார்ஜுன கார்கே
‘வாக்காளா்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு பயம் ஏற்பட்டுள்ளது.
‘தேச பக்தர்களுக்கு' ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்-ராகுல் விமர்சனம்
‘தேச பக்தா்கள்’ என்று தங்களை அழைத்துக் கொள்பவா்களுக்கு (பிரதமா் மோடி, பாஜகவினா்) ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்றால் அச்சம் ஏற்படுகிறது.
சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் விருப்பம்-பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நாட்டில் சொத்து வாரிசுரிமை வரியை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது; மக்கள் வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் அவா்களிடம் கொள்ளையடிப்பதே காங்கிரஸின் தாரக மந்திரம் என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக குற்றஞ்சாட்டினாா்.
அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி
திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உதவியாளா்களிடம் இருந்து ரூ. 3.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்
மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
ஊதிய முரண்பாடு: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்
மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க அறிவுறுத்த வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கர்நாடக இசை அனைவருக்குமானது-தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
கா்நாடக இசை அனைவருக்குமானது என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா்.