Poging GOUD - Vrij
தங்கத்தைப் பறிக்க முயற்சி; மோசடித் திட்டம் முறியடிப்பு
Tamil Murasu
|July 27, 2025
கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி மாலை வங்கிக் கணக்கிலிருந்த மொத்தப் பணத்தையும் எடுத்தார் 65 வயது நபர். அதை இரு அடகுக் கடைகளுக்கு எடுத்துச் சென்று $52,700 மதிப்புள்ள தங்க வில்லைகளை வாங்கினார்.
-
பின்னர், மோசடிப் பேர்வழிகள் கூறியதுபோல பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையத்துக்குச் சென்று, முன் பின் தெரியாத பெண்ணிடம் அதனை ஒப்படைத்தார்.
உடனடியாக அவரிடமிருந்து அதனைப் பெற்றுக் கொண்ட அப்பெண், எதுவும் பேசாமல் வேகமாகச் சென்றுவிட்டார் என்றார் திரு செங்.
வீடு திரும்பியதும் நடந்ததை மனைவியிடம் விளக்கிக் கூறிய அவரிடம், “இது மோசடி," என்று மனைவி கூறவே திகைத்துப்போனார்.
தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி, இரு வாரங்களுக்குப் பின்னர் ஜூலை மாதம் ஓய்வு பெற்ற அவர், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் விசார ணைக்கு அதிகாரிகளுக்கு உதவுவதாக நினைத்தார்.
இந்த மோசடி ஜூன் 19ஆம் தேதி பிற்பகல் தொடங் கியது. பணியாற்றிக்கொண்டிருந்த அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆங்கிலத்தில் பேசிய அந்நபர் நிதிச் சேவை நிறுவனமான 'யூனியன் பே' நிறுவனத்திலிருந்து அழைப்பதாகவும் சொன்னார்.
தொடர்ந்து, திரு செங், அண்மையில் புதிய காப்பு றுதித் திட்டத்தில் இணைந்துள்ளதாகச் சொன்னார். தாம் குழப்பமடைந்ததாகவும், “புதிய காப்புறுதியில் சேரவில்லை. தவறான தகவலாக இருக்கலாம்," என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
அந்த 'யூனியன் பே அதிகாரி' அத்திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் ஆனால் அவரது தகவல் கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். கவலையடைந்த திரு செங்கிடம், நாணய ஆணையத்தைத் தொடர்புகொள்ள தாம் உதவுவதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அதன்பின்தான் திருப்பங்கள் நிகழத் தொடங்கின. மூன்று மணி நேரம் நீடித்த அந்த அழைப்பில், இரு 'நாணய ஆணைய அதிகாரிகள்' திரு செங்கின் தகவல்கள் காப்புறுதித் திட்டம் பெற பயன்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறினார். இந்தச் சந்தேகத்துக்குரிய பரிமாற்றங்களுக்குப் பணமோசடி நடவடிக்கையுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறினர்.
“அந்த அதிகாரி சூழ்நிலையை அமைதியாக விளக்கினார்,” என்று நினைவுகூர்ந்தார் திரு செங்.
Dit verhaal komt uit de July 27, 2025-editie van Tamil Murasu.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Tamil Murasu
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size
