Poging GOUD - Vrij
விவசாயிகள் உணவு உற்பத்தி செய்யவில்லை என்றால் எல்லா வளர்ச்சிகளும் தேங்கி போய்விடும்: ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு
Maalai Express
|June 28, 2025
புதுவையில் நடந்த தேசிய நெல் திருவிழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேசியது, இந்த திருவிழாவில் கலந்துகொள்ள வந்திருக்கும் விவசாய பெருமக்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய அன்பான வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் தான் இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கிறார்கள்.
-
"சுழன்றும் ஏர் பின்னது உலகம்", "உழுவார் உலகத்திற்கு ஆணி" என்று 3000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் சொல்லி இருக்கிறார். அது இன்று வரை உண்மையாகவே இருக்கிறது. அதனால் நீங்கள் எல்லோரும் கலந்து கொள்ளும் இந்த விழாவில் கலந்து கொள்வதிலும், விவசாயம் பற்றியும் விவசாயிகளின் நலன் பற்றியும் பேச வாய்ப்பு கிடைத்ததிலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயற்கை விவசாயம், பாரம்பரிய பயிர் வகைகள் பற்றி கட்டாயம் பேச வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கும். இந்தியா சுதந்திரம் அடைந்த போது, நம்முடைய விவசாய உணவு உற்பத்தி குறைவாக இருந்தது. தொடர்ந்து ஏற்பட்ட வறட்சி, உணவு தட்டுப்பாடு அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட “பெங்கால் பஞ்சம்" இந்த அனுபவங்கள் இந்தியாவை உணவுப் பாதுகாப்பு பற்றிய பெரிய அச்சத்தில் வைத்தது.
மிகப் பெரிய ஜனத்தொகை கொண்ட இந்தியாவின் உணவு தாணிய பற்றாக்குறையை சமாளிக்க அதிக அளவில் உணவுப் தானியத்தை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. 1965 வரை கூட அமெரிக்காவில் இருந்து PL-418 ரக கோதுமையை இறக்குமதி செய்து கொண்டு இருந்தோம். அந்த நிலையில் தான் உணவு தானிய உற்பத்தியில் ஒரு நிலையான தீர்வை தேடினோம். அப்போது, 1960களில் "பசுமை புரட்சி" அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் தலைமையில் அது நடைமுறைக்கு வந்தது. உயர் தரமான வீரிய விதைகள் IR-8 போன்ற நெல் கோதுமை விதைகள் அறிமுகம் ஆனது. உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உரங்களை பூச்சி கொல்லிகளை பயன் படுத்தினோம். தொழில் நுட்பத்தை புதிய புதிய எந்திரங்களை பயன் படுத்தினோம். அதற்காக பசுமை திட்ட நதி என்று வங்கிக் கடன்கள் தரப்பட்டது. நெல், கோதுமை உற்பத்தியில் வளர்ச்சி அடைந்தோம். இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்நிறைவு பெற்ற நாடாக மாறியது.
ஆனால் அதில் சில தவறுகள் நடைபெற்றது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். வீரிய ரகங்களை பயன்படுத்தியதால் நம்முடைய பாரம்பரிய விதை ரகங்கள் மறைந்து போய்விட்டது. ரசாயண உரங்களும் பூச்சி கொல்லி மருந்துகளும் நம்முடைய மண்ணின் வளத்தை அழித்து விட்டன. பாசன நீர் அதிகம் தேவைப்பட்டதால் நம்முடைய நீர் ஆதாரங்கள் அழிந்து போயின.
Dit verhaal komt uit de June 28, 2025-editie van Maalai Express.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Maalai Express
Maalai Express
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
1 min
April 16, 2026
Maalai Express
உதயநிதி சொத்து விவரம் தொடர்பான வழக்கு: வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில், குமாரவேல் என்பவர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு உள்ளதாக கூறி மனு தாக்கல் செய்து இருந்தார்.
1 min
April 15, 2026
Maalai Express
தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
1 min
April 15, 2026
Maalai Express
புதுவை அமைச்சரவையில் புதிதாக துணை முதலமைச்சர் பதவி?
புதுவை அமைச்சரவையில் முதல்-அமைச்சருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெறுவர்.
1 min
April 15, 2026
Maalai Express
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
1 min
April 12, 2026
Maalai Express
15ந்தேதி தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்
தமிழகத்தில் எங்கெல்லாம் தடை..?
1 min
April 12, 2026
Maalai Express
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக ஐ.ஜி.துரை குமார் நியமனம்
சட்டமன்ற தேர்தல் வருகிற 23ந்தேதி நடைபெற உள்ளது.
1 min
April 12, 2026
Maalai Express
தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவா?
பரபரப்பு தகவல்கள்
1 min
April 13, 2026
Maalai Express
தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
Maalai Express
அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன: டிரம்ப் எச்சரிக்கை
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
1 min
April 11, 2026
Translate
Change font size
