Poging GOUD - Vrij
மாறும் உலகில்... மாறாத போர்கள்...
Dinamani Vellore
|July 12, 2025
மக்களும், நாடுகளும் இப்போதும் இரு அடிப்படை விதிகளைக் கொண்டே நிர்வகிக்கப்படுகின்றன. இவை 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொள்கைகள். அவை, முதலில் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிப்பது, அடுத்து அதிகாரத்தை முறையாகப் பகிர்வது மற்றும் பிற நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப இணைந்து செயல்படுவது.
உலகின் தற்கால நிகழ்வுகள் குறித்து நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறைமை மடிந்துவிட்டனவா? இல்லை புதிதாக ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்படவே இல்லையா? நாம் இன்னும் கற்கால உலகில்தான் இருக்கிறோமா? இல்லையென்றால் 17, 18-ஆம் நூற்றாண்டில் இருந்த பழைய நிலைக்குத் திரும்புகிறோமா? என்பவைதான் அவை.
இப்போது 5 கண்டங்களில் ஒரே நேரத்தில் சண்டை நடைபெறுவதை உலகம் அச்சத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச வர்த்தகக் கட்டமைப்பைச் சீர்குலைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட செயலால் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது.
2022, பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. 2023 அக்டோபரில் இருந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹூதி, ஈரான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதுதவிர, கடந்த 30 ஆண்டுகளாக சீனா பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. 26 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கார்கில் போருக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரு பெரிய மோதலை நடத்தியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா பூமியைத் துளைத்து தாக்கும் குண்டுகளை வீசியுள்ளது.
ஐரோப்பாவில் அச்சு இயந்திரத்தின் வருகை அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவை மனித நேய இயக்கங்களுக்கு வலுவூட்டின. அந்தக் காலகட்டத்தில் எழுந்த நவீன சிந்தனைகளைப் போன்ற எழுச்சி இப்போதும் இந்த நேரத்திலும் நமக்கு அவசியமாகிறது.
1648-ஆம் ஆண்டு வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தம் மூலம் ஐரோப்பாவில் நீடித்து வந்த '30 ஆண்டு போர்' மற்றும் '80 ஆண்டு போர்' ஆகியவை முடிவுக்கு வந்தன. இதன்பிறகு, 17-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிரான்ஸ் தலைமை அமைச்சரான கார்டினல் டி ரிச்செலியூ ஒவ்வொரு நாடும் அதனதன் தேச நலன்களுக்காக மட்டும் செயல்படுவது என்ற கருத்தை முன்வைத்தார். இது மோதல்களைத் தவிர்க்க வழிவகுத்ததுடன், அதிகாரச் சமநிலை, நாடுகள் இடையே ஒத்துழைப்பு, கூட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்க முதல்படியாக அமைந்தது.
பின்னர், இது டச்சு நாட்டைச் சேர்ந்த மனிதநேய ஆர்வலரும் பல்துறை வல்லுநருமான ஹ்யூகோ க்ரோடியஸால் புதிய கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டது.
Dit verhaal komt uit de July 12, 2025-editie van Dinamani Vellore.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Vellore
Dinamani Vellore
இணையத்தில் வாசிப்போம்...
கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.
1 mins
January 11, 2026
Dinamani Vellore
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Vellore
செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.
2 mins
January 11, 2026
Dinamani Vellore
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
1 mins
January 11, 2026
Dinamani Vellore
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
2 mins
January 11, 2026
Dinamani Vellore
சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு
திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.
1 min
January 11, 2026
Dinamani Vellore
தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்
ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.
1 min
January 11, 2026
Dinamani Vellore
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Vellore
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Vellore
தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்
பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.
1 min
January 11, 2026
Translate
Change font size
