Poging GOUD - Vrij
ஞாயிறுதோறும் வாசிப்பு...
Dinamani Tiruvarur
|July 06, 2025
க்களிடம் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஊடகவியலாளர் பத்மஜா ஜெயராமன் பாராட்டத்தக்கச் செயலை கடந்த சில மாதங்களாகச் செய்துகொண்டிருக்கிறார். சென்னையில் 'கிண்டி வாசிப்பு வட்டம்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தி மண்டபத்தில் கூடி மாலை நாலரை மணி முதல் ஆறு மணிவரை தாங்கள் விரும்பிய புத்தகங்களை எடுத்து வாசிக்கும் முயற்சிதான் அது.
அவரிடம் பேசியபோது:
"பொதுவாகவே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மக்களிடம் குறைந்துவிட்டது. செய்திகளையும் கைப்பேசி வாயிலாகவே அறிகின்றனர். வாசிப்பு என்பது ஒரு மனதுக்கு மகிழ்ச்சி தரும் இனிமையான அனுபவம் என்ற உணர்வு சமூகத்தில் குறைந்து வருவது வேதனையை அளிக்கிறது. முன்பெல்லாம் ரயிலில், பேருந்துகளில் பயணம் செய்யும்போது மக்கள் புத்தகங்களை, பத்திரிகைகளைப் படித்துகொண்டிருக்கும் காட்சி மிகவும் சகஜமானது. இன்றே கைப்பேசியில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
வரலாறு, வாழ்க்கை வரலாறு புத்தகங்களை நான் விரும்பி வாசிப்பேன். இதனால், வாசிப்பு ஆர்வத்தை மக்களிடம் அதிகரிப்பது குறித்து யோசித்துகொண்டிருந்தேன்.
பெங்களூரில் ஒரு புத்தகக் கடையில் வாரம்தோறும் வாசகர் கூட்டம் நடப்பதாகவும், அந்த நேரத்தில் வாசகர்கள் தங்கள் விரும்பும் புத்தகத்தை அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து படிப்பதாகவும் கேள்விப்பட்டேன். அதேபோல நாமும் ஏன் ஏதாவது செய்யக் கூடாது என்ற பொறி தட்டியது.
Dit verhaal komt uit de July 06, 2025-editie van Dinamani Tiruvarur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Tiruvarur
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tiruvarur
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Tiruvarur
1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
1 min
November 02, 2025
Dinamani Tiruvarur
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruvarur
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruvarur
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tiruvarur
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruvarur
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Tiruvarur
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Translate
Change font size
