Poging GOUD - Vrij
பசுமைச் சுற்றுலாவுக்கு பச்சைமலை!
Dinamani Tirunelveli
|July 27, 2025
திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள மலைத்தொடர் பச்சைமலை. கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாதுமலை ஆகிய மலைத்தொடர்களுள் ஒன்றான இந்த மலை பச்சைப் போர்வை போர்த்திய வகையில் பசுமைச் சுற்றுலாவுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
அருவிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மலையேற்றம், கோடை வாசஸ்தலம் உள்ளிட்ட சிறப்புகளோடு, தேன், பலா, மா, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விளைபொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இரவு தங்கி மலைச் சூழலை முழுவதும் ரசித்து மகிழலாம். குடும்பத்தினருடன் சுற்றுலா வந்து செல்ல ஏற்ற பகுதியாகும்.
சுமார் 19, 076 ஹெக்டேரில் மலை விரிந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,072 மீ. வரை உயரம் கொண்டது. சுமார் 527 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 35 காப்புக் காடுகள் உள்ளன. சுற்றுலாத் தலமாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, வனத் துறையால் பராமரிக்கப்படுகிறது.
தென்புறநாடு, ஆத்திநாடு, வன்னாடு, கோம்பைநாடு ஆகிய நான்கு பகுதிகளாக 48 கிராமங்களில் 'பச்சை மலை யாளி' என்று அழைக்கப்படும் மலை வாழ்மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு வேளாண்மையே முக்கியத் தொழிலாகும். இங்கு தேசிய தாவர இனங்கள், மூலிகை வகைகள் பல உள்ளன.
இங்குள்ள மக்களின் அணிகலன்களும், உடைகளும், வீடுகளின் அமைப்புகளும், கால மாறுதலுக்கேற்ப சமவெளியில் வாழும் மக்களை ஒட்டியே அமைந்துள்ளன. பொழுதுபோக்குக்காக நாடகங்களை நடத்தி வருகின்றனர். இங்கு, விளையும் பயிர்களில் முந்திரி, மரவள்ளிக்கிழங்கு, பலாப்பழம், மாம்பழம் ஆகியன மலையின் சிறப்புப் பெற்றவை.
Dit verhaal komt uit de July 27, 2025-editie van Dinamani Tirunelveli.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!
சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Tirunelveli
தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்
மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Tirunelveli
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Dinamani Tirunelveli
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Dinamani Tirunelveli
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு
ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளான காங்கோ, உகாண்டா ஆகியவற்றில் எபோலா வைரஸ் தொற்று பரவுவதை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Tirunelveli
3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
May 18, 2026
Dinamani Tirunelveli
பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.
1 min
May 18, 2026
Dinamani Tirunelveli
நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Tirunelveli
ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்
கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
1 min
May 18, 2026
Dinamani Tirunelveli
இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகம் அருகே விமான நிலையம் குத்தகை
இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் இருக்கும் மத்தள ராஜபட்ச சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் இலங்கையின் நடவடிக்கையை, இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 mins
May 18, 2026
Translate
Change font size
