Poging GOUD - Vrij
மயக்கும் மாயத் திரை!
Dinamani Thoothukudi
|November 19, 2025
நாடன் சூர்யாவின் ஒரு கவிதை ஃபேஸ்புக்கில் சட்டென்று என்னை ஈர்த்தது. நிறைய யோசிக்கவும் வைத்தது.
சக மனிதனுக்கு நேரும் வன்முறைகளை சர்வசாதாரணமாகக் கடந்து போய்க் கொண்டிருக்கும் நான்தான் ஒருகாலத்தில் பொம்மையின் கை உடைந்ததற்கு ஒரு வாரம் அழுது இருக்கிறேன்.
பொம்மையின் கை உடைந்ததற்கு அழுத குழந்தை வளர வளர ஏன் இரக்கத்தைத் தொலைக்க ஆரம்பிக்கிறது? மென்மையான அதன் இதயம் எப்படிக் கடினப்பட்டுப் போகிறது? முன்பெல்லாம் வேலியில் போகும் ஓணானைக் கல்லால் அடிப்பது, தட்டான் பூச்சியைக் கயிற்றால் கட்டி இழுப்பது போன்ற அடாவடிகளைச் செய்தார்கள். தற்போதைய பிள்ளைகள் கைப்பேசி வன்முறை விளையாட்டுகளை ஆர்வத்துடன் விளையாடுகிறார்கள். இவர்களும் பிற உயிர்களை துன்புறுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கைப்பேசி விளையாட்டுகள் வன்முறையை உள்ளடக்கியதாகவோ அல்லது வன்முறையைத் தூண்டுவதாகவோ இருக்கின்றன.
சில வகை விளையாட்டுகளில் வீரர்கள் ஒருவரையொருவர் சுட்டு வீழ்த்திய பிறகு, கடைசியில் நிற்பவர் வெற்றியாளர் ஆவார். தீவிர சண்டை, துப்பாக்கிச் சண்டையை மையமாகக் கொண்ட விளையாட்டை சிறுவர்கள் விரும்பி விளையாடுகிறார்கள். பல விளையாட்டுகள் பயங்கரமான வன்முறையைக் கொண்டவை.
இதனால், வளரும் குழந்தைகள் மன நலன் மற்றும் நடத்தை சார்ந்த பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இது அவர்களது தீவிர கோபம், வன்முறை நடத்தைக்கு வழிவகுக்கிறது. விளையாட அனுமதிக்காத போது பெற்றோருடன் சண்டையிடுகிறார்கள்; பொருள்களைப் போட்டு உடைக்கிறார்கள்; குடும்ப உறுப்பினர்களுடன் வன்முறையாக நடந்துகொள்கிறார்கள். ஒரு விளையாட்டுக்காக தாயை சுட்டுக்கொன்ற அதிர்ச்சியூட்டும் வழக்கு ஒன்று உள்ளது. சிலசிறார்கள் தற்கொலையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எப்போதும் விளையாட்டிலேயே மூழ்கிக் கிடப்பதால் மிகுந்த மன அழுத்தம், பதற்றம் மற்றும் மன நோயால் பாதிக்கப்படுகிறார்கள். படிப்பில் கவனம் இருக்காது. அறிவார்ந்த மாணவர்கள்கூட தேர்வில் தோல்வியைத் தழுவுகிறார்கள். மேலும், உடல் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மணிக்கணக்கில் ஒரே நிலையில் உட்கார்ந்து விளையாடுவதால் முதுகெலும்பில் தேய்மானம் ஏற்படுவது, முதுகுத்தண்டு வளைவது, நடக்கவும் சிறுநீர் கழிக்கவும்கூட அவதிப்படும் நிலை என பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
அதிக நேரம் விளையாடுவதால் கைகள், குறிப்பாகப் பெருவிரல் வீங்கி வலி உண்டாகிறது. கண்ணில் வறட்சி, கிட்டப் பார்வை கோளாறுகள் வருகின்றன. தூக்கம் பாதிக்கப்படுகிறது.
Dit verhaal komt uit de November 19, 2025-editie van Dinamani Thoothukudi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani Thoothukudi
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Thoothukudi
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Thoothukudi
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா
பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Listen
Translate
Change font size

