Poging GOUD - Vrij
மகளிரின் போராட்டமும் உரிமைகளும்...
Dinamani Thanjavur
|March 08, 2025
இன்றைய நவீன பெண் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்-பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.
-
உலகம் முழுவதும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தின கொண்டாட்டங்கள் வாழ்த்துகள் அதிகரித்து வருகின்றன.
இந்த தினம் எப்போது தோன்றியது, அதன் பின்னணி என்ன? என்ற வரலாற்றை அனைவரும் அறிந்து கொண்டால்தான் தற்போதைய சூழலில் உழைப்பில் ஈடுபடும் பெண்களின் சூழ்நிலை, பிரச்னைகள் குறித்து புரிந்து கொள்ள முடியும்.
1820-ஆம் ஆண்டு புதிய பிரிட்டனில் முதன்முதலாக தையல் பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு 1844-ஆம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிச உலகக் கூட்டத்தில் ஜவுளி ஆலையில் பணியாற்றும் பெண்களுக்கான போராட்டம் நடைபெற்றது.
தொழிலாளிகளின் 10 மணி நேரப் பணி நேரம், தொழிற்சாலைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவை குறித்து இந்தப் போராட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
குறைவான கூலி கொடுத்தால் போதும்; அதிக மணி நேரம் வேலை வாங்கலாம் என்பதால் பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். குறைவான கூலி; 15 மணி நேரம் வேலை; கடுமையான பணி; கடுமையான அபராதங்கள்; காற்றோட்டம் - வெளிச்சம் இல்லாத பணிச்சூழல்; குழந்தைகளுக்கு அதிகப் பணி நேரம் என்று மோசமான சூழ்நிலை நிலவியது.
இதை எதிர்த்து அவ்வப்போது பெண் தொழிலாளர்கள் போராடி வந்தனர். ஜெர்மனிய தொழிற்சங்கத் தலைவரும் சோஷலிச ஜனநாயக கட்சியின் முக்கியத் தலைவருமான கிளாரா ஜெட்கின் பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, 1889-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கம்யூனிச உலகக் கூட்டத்தில் விரிவாக விளக்கி பேசினார்.
அதிகமான பணி நேரம், மிகக் குறைவான கூலி, மிக மோசமான பணியிடம் - குறிப்பாக, பெண்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் மற்றும் மதிப்பு கிடைக்காதது ஆகியவை குறித்து விளக்கிப் பேசினார். மேலும், ஆண் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம்தான் பெண் தொழிலாளர்கள் விடுதலை அடைய முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.
Dit verhaal komt uit de March 08, 2025-editie van Dinamani Thanjavur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thanjavur
Dinamani Thanjavur
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Thanjavur
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Thanjavur
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Thanjavur
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Thanjavur
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Thanjavur
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Thanjavur
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Thanjavur
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Thanjavur
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Thanjavur
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Translate
Change font size

