Poging GOUD - Vrij
மும்பையின் நிழல் உலக தாதாக்களை ஒடுக்கிய தமிழர்
Dinamani Pudukkottai
|October 19, 2025
துனுஷ்கோடி சிவானந்தம். மும்பை மாநகர போலீஸ் கமிஷனராகவும், மகாராஷ்டிர மாநில காவல்துறையின் தலைவராகவும் பணியாற்றிய தமிழர். பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமான காவல்துறைப் பணியில் இவர் சந்தித்த சவால்கள், புரிந்த சாதனைகள் பல. இவரது பாராட்டுதலுக்குரிய பணிகளுக்காக ஜனாதிபதியின் பதக்கம் பெற்றவர். இந்தியாவின் உள்நாட்டு, அயல்நாட்டு பாதுகாப்புக்கான சிறப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
இவரது காக்கிச்சீருடை பணிக்காலத்தின் மிகச்சிறப்பான அம்சமே மும்பை மாநகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பல்வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அத்தனை நிழல் உலக தாதாக்களின் கொட்டங்களையும் அடக்கி, மும்பை மக்களும், வர்த்தகத்துறையினரும் அச்சமின்றி வாழ வழி செய்தவர் என்பதுதான். சிவானந்தம், மும்பை நிழல் உலக தாதாக்களை ஒடுக்கிய அனுபவத்தை புத்தகமாக எழுதி இருக்கிறார். 'தி பிரம்மாஸ்திரா அன்லீஷ்டு' என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்காக அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவரோடு ஒரு சந்திப்பு:
பொள்ளாச்சியில் புகுமுக வகுப்பும், பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு, 1974-இல் கோயம்புத்தூரில் முதுகலைப் படிப்பினை முடித்தேன். உடனே, கோயம்புத்தூரில் புதிதாக துவக்கப்பட்ட ஒரு கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. 1975-இல் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வந்து தேர்வு எழுதினேன். ஐ.பி.எஸ். பணிக்கு நான் தேர்வானேன். ஐ.பி.எஸ். பயிற்சியை முடித்துவிட்டு, எனக்கு ஒதுக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிக்குச் சேர்ந்தேன்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா என்ற ஊரில் முதல் போஸ்டிங். அதுதான் சத்ரபதி சிவாஜியின் தலைநகரம். ஐ.பி.எஸ். பயிற்சியின்போதுதான் ஹிந்தி கற்றுக் கொண்டு, அதற்குரிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் சதாராவில் எல்லோரும் மராத்திதான் பேசுவார்கள். நான் சீக்கிரமே அவர்களோடு பேசிப் பழகி சரளமாக மராத்தி மொழி பேசக் கற்றுக் கொண்டுவிட்டேன்.
Dit verhaal komt uit de October 19, 2025-editie van Dinamani Pudukkottai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா
‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்
1 mins
June 10, 2026
Dinamani Pudukkottai
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Pudukkottai
மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Pudukkottai
வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
June 10, 2026
Dinamani Pudukkottai
சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்
முதல்வர் விஜய் அறிவிப்பு
2 mins
June 10, 2026
Dinamani Pudukkottai
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Dinamani Pudukkottai
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Pudukkottai
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Pudukkottai
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Pudukkottai
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Listen
Translate
Change font size

