Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

கச்சத்தீவு மீட்பு- தீர்மானங்கள் தீர்வாகாது!

Dinamani Perambalur & Ariyalur

|

April 05, 2025

இந்தியா - இலங்கை இடையிலான பேச்சுவார்த்தை மூலம் கச்சத்தீவை மீட்பது அல்லது குத்தகைக்கு எடுப்பது போன்ற தீர்வுகள் முன்மொழியப்பட்டாலும், இலங்கை அரசு அதை ஏற்க வேண்டும். தற்போதைய அரசியல் சூழலில் இலங்கை அரசு இதற்குச் சம்மதிக்க வாய்ப்பு குறைவு.

- முன்னாள் அமைச்சர்.

கச்சத்தீவை மீட்பது குறித்தான விவகாரத்தில் என்ன நடந்தது? தற்போது என்ன நடக்கிறது? இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையொப்பமானபோது மறைந்த முதல்வர் மு.கருணாநிதி என்ன செய்தார்? கச்சத்தீவை மீட்பது தொடர்பாக இந்தியா-இலங்கை இரு நாடுகளிடையேயான ஒப்பந்த ஷரத்துகள் என்ன தெரிவித்திருக்கின்றன? ஆக, இனி கச்சத்தீவை மீட்க இந்திய அரசு முனைந்தால், அது நிறைவேறுமா என்கிற கேள்விகள் எழுகின்றன.

கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்கிற கேள்வி இன்று நேற்றல்ல, சற்றேறக்குறைய 1920-களில் இருந்து தொடர்கதையாகி வருகிறது. பாக் நீரிணை - மன்னார் வளைகுடா பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்காக 1921 அக்டோபர் 24-ஆம் தேதி கொழும்பு நகரில் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சுங்க வரிக்கான முதன்மை கலெக்டர் ஹார்ஸ்பர்க், ‘கச்சத்தீவு இலங்கைக்கு வரும்படி எல்லையை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநாட்டை நிறுத்திவிடலாம்’ என்ற கருத்தை முன்வைத்தார்.

இதை ஏற்காத இந்தியக் குழு, வேண்டுமானால் அந்தப் பகுதியின் மீன்பிடி உரிமையை மட்டும் தருவதாகச் சொன்னது. ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை காலனி அலுவலகம் ஏற்கவில்லை. ஆகவே, சட்டரீதியாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை.

ஆனால், தற்போது கச்சத்தீவு இலங்கை வசம் உள்ளதாகவும், அதை மீட்க வேண்டும் என இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும் இந்தப் பிரச்னை அவ்வப்போது எழுப்பப்பட்டது. இன்று வரை இந்தப் பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதன் மூலம் மட்டுமே கச்சத்தீவை மீட்க முடியுமே தவிர, தனிநபரின் முயற்சியால் ஏதும் பலன் விளையாது. ஆனால், தேர்தல் காலத்தில் மட்டுமே கச்சத்தீவைப் பற்றிப் பேசுவது சந்தர்ப்பவாதமா அல்லது வாக்கு அரசியலா என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

MEER VERHALEN VAN Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி

இங்கிலாந்து கோல் மழை

time to read

1 mins

December 01, 2025

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Translate

Share

-
+

Change font size