Poging GOUD - Vrij
தில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு
Dinamani New Delhi
|August 01, 2025
எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு
-
புது தில்லி, ஜூலை 31: பதவி விலகும் தில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோராவுக்கு வியாழக்கிழமை காலை புதிய காவல் கோட்டத்தில் உள்ள பரேட் மைதானத்தில் பிரியாவிடை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
1988 தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா, தமிழ்நாடு, இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் முழுவதும் பல முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். அவர் ராகேஷ் அஸ்தானாவுக்குப் பிறகு, ஆகஸ்ட் 1, 2022 அன்று தில்லி காவல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.
முன்னதாக, தில்லி அரசின் உள் துறை ஜூன் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், சஞ்சய் அரோரா ஜூலை 31, 2025 அன்று ஓய்வு பெற உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பதவி விலகும் ஆணையர்களுக்கு வழங்கப்படும் ஒரு பாரம்பரிய பிரியாவிடை சடங்கு அணிவகுப்பு ஆகும். இதில் முறையான அணிவகுப்பு மற்றும் காவல் ஆணையரின் உரை இடம்பெறும். அதைத் தொடர்ந்து அடையாளமாக பதவியேற்பு விழா நடைபெறும்.
எஸ்.பி.கே. சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு: இந்நிலையில், ஊர்க் காவல் படைப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் எஸ்.பி.கே. சிங்கிற்கு தில்லி காவல் ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை உள் துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, அவர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார். தற்போதைய காவல் ஆணையர் சஞ்சய் அரோராவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பை சிங் கூடுதலாகக் கவனிப்பார்.
Dit verhaal komt uit de August 01, 2025-editie van Dinamani New Delhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani New Delhi
Dinamani New Delhi
திமுக - அதிமுக கூட்டணி குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக - அதிமுக கூட்டணி குறித்து தகவல்கள் வந்தபோதும், இந்த விவகாரம் தொடர்பாக யாரும் தன்னிடம் பேசவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
May 19, 2026
Dinamani New Delhi
‘ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு’: யுஏபிஏ வழக்குகளுக்கும் பொருந்தும்
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட (யுஏபிஏ) வழக்குகளிலும் 'ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு' என்ற கோட்பாடு பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Dinamani New Delhi
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்
'அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்' என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை திங்கள் கிழமை தெரிவித்தார்.
1 min
May 19, 2026
Dinamani New Delhi
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani New Delhi
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani New Delhi
அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு
முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து
1 min
May 19, 2026
Dinamani New Delhi
தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
May 19, 2026
Dinamani New Delhi
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani New Delhi
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani New Delhi
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
அமெரிக்காவின் வரி விதிப்பு, பொருளாதார தடைகளை கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலர் சுஜாதா சர்மா திங்கள் கிழமை தெரிவித்தார்.
1 min
May 19, 2026
Translate
Change font size

