Poging GOUD - Vrij

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

Dinamani Nagapattinam

|

December 03, 2025

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

- குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

இப்புண்ணியத் தலத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம், காசிக்கும் நமது தமிழ் நாட்டிற்கும் இடையேயான வரலாற்று பந்தத்தைக் கொண்டாடும் திருவிழாவாக மாறியிருக்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இங்கே காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது.

கடந்த 2022-இல் 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' என்று நாம் கொண்டாடிய பாரத விடுதலையின் 75-ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தின்போது முதலாவது காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. அப்போதுமுதல், இந்நிகழ்வு தேசிய நல்லிணக்கத்துக்கான ஒரு முக்கிய நிகழ்வாக, கங்கையின் கலாசாரமும் காவிரியின் பண்பாடும் கைகோக்கும் விழாவாக, வடக்கும் தெற்கும் அதன் பொதுப் பாரம்பரியத்தின் வழி இணைந்து கொண்டாடும் நிகழ்வாக உருவெடுத்திருக்கிறது. இது மகாகவி பாரதியார் கண்ட கனவு.

'கங்கை நதிப் புரத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்'

என்ற ஒருங்கிணைந்த ஒற்றுமையான உறுதியான இந்தியாவை உருவாக்க வழிவகுக்கும் விழாவாக காசி தமிழ் சங்கமம் விழா அமைந்துள்ளது.

பாரதியார் கண்ட கனவு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் இன்று நிஜமாகிக் கொண்டிருக்கிறது. காசி தமிழ்ச் சங்கமத்தை வடிவமைப்பது என்கிற உயர்ந்த நோக்கத்தின் பின்னணியில் இருந்தவர் அவர்தான். தமிழகம் குறித்து உத்தர பிரதேசமும், வட இந்தியா குறித்துத் தென்னிந்தியாவும் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிகழ்வு.

அந்நியப் படையெடுப்பாலும், பிரிவினைவாத அரசியலாலும், குறுகிய கண்ணோட்டத்தாலும் பிரிந்து கிடந்த உணர்வுகளையும், உள்ளங்களையும் ஒருங்கிணைக்கும் காசி தமிழ் சங்கமம் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தின் விளைவுதான் இப்போது நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொண்டாட்டம்.

கடந்த ஞாயிறு, நவம்பர் 30-ஆம் தேதி ஒலிபரப்பான 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர், “காசி-தமிழ் சங்கமம் உலகின் மிகத் தொன்மையான மொழியும் உலகின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்றும் சங்கமிப்பதாகும்” என்று கூறினார்.

MEER VERHALEN VAN Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்

தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Nagapattinam

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Dinamani Nagapattinam

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size