Facebook Pixel கரோனா பரவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் | Dinamani Nagapattinam - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

கரோனா பரவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம்

Dinamani Nagapattinam

|

June 01, 2025

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, மே 31: தமிழகத்தில் அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால் கரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. எனினும், கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்புக்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் செயல் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது, அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பரவல் குறைவு: இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கரோனா தொற்று சமூக பரவலில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வீரியமிழந்த ஓமைக்ரான் வகை கரோனா வைரஸ்களான ஜெ.என்.1, எக்ஸ்இசி போன்றவையே காணப்படுவதாகவும், புதிதாக எவ்வித உருமாறிய கரோனா வைரஸ்களும் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் தற்போது வரை 91,583, இந்திய அளவில் 1,800 கரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் மே மாதத்தில் 293 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதில் 148 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர். கரோனா பரவல் சமூகத்தில் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. நோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித தீவிர தொற்றுக்கான அறிகுறிகளும் காணப்படவில்லை.

MEER VERHALEN VAN Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இங்கிலாந்துடனான மகளிர் டி20 யஸ்திகா, ஜெமிமா, நந்தினி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

time to read

1 min

May 30, 2026

Dinamani Nagapattinam

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Nagapattinam

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Nagapattinam

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க செயலர்

வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி நடராஜும் இணைந்தனர்

time to read

1 mins

May 29, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Nagapattinam

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !

பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.

time to read

2 mins

May 28, 2026

Translate

Share

-
+

Change font size