Facebook Pixel காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன் | Dinamani Madurai - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்

Dinamani Madurai

|

October 05, 2025

அந்த மாணவரின் கையில் விலங்கிட்டு ஆங்கிலேய அரசின் போலீஸார் மதுரை ஆரப்பாளையம் சிறையிலிருந்து நடத்தி, வைகையின் வடகரையிலிருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் முன் கொண்டு நிறுத்தினர். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த மாணவரை அலிபுரம் சிறையில் 60 நாள்கள் அடைக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்தது.

- டி.எஸ்.ஆர். வேங்கடரமணா

காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்

அவர் மீண்டும் மதுரைக் கல்லூரி மூலமாக பட்டப் படிப்பை முடித்து, திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஹானர்ஸ் படித்தார். 1948-இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் முதுகலையில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

1952-இல் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்து, 1961-இல் கரூர் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தன்னுடைய மென்மையான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்தார். அவருடைய பணியைப் பாராட்டி இந்திய ஆட்சிப் பணியை தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டயம் வழங்கியது.

1967 ஜூலை 1-இல் எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரத்துக்கு முன்பு கையில் விலங்கிட்டு நிறுத்தப்பட்டாரோ, அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக மாடிப் படிகளில் ஏறி, ஆட்சியர் அறையில் அமர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அவர்தான் ‘காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்' என்ற வள்ளுவர் வாக்குக்கு வாழும் உதாரணமாயிருக்கும் லட்சுமிகாந்தன் பாரதி.

2025 அக்டோபர் 4-இல் தன்னுடைய 99 வயதை முடித்து, அக். 5-இல் தன்னுடைய நூறாவது அகவையை தொடங்குகிறார் இவர். இவருக்கு 2024-ஆம் ஆண்டில் தினமணி சார்பில் 'பாரதியார் விருது' வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 'பாரதி' என்ற பட்டப் பெயருடன் விளங்கும் குடும்பங்கள் இரண்டு. இவ்விரு குடும்பத்தின் மூல புருஷர்களுக்கும் 'பாரதி' பட்டத்தை வழங்கி கௌரவித்தவர் அன்றைய எட்டயபுரம் மகாராஜா. ஒருவர் சுப்ரமணிய பாரதி, மற்றொருவர் லட்சுமிகாந்தன் பாரதியின் தாய்வழித் தாத்தா சோமசுந்தர பாரதி. இருவருமே எட்டயபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். நான் சட்டப் பேரவை உறுப்பினராக அன்றைய அமைச்சர் ராஜாராமுடன் குற்றாலத்திலிருந்து தென்காசிக்கு வந்து கொண்டிருந்தபோது, 'பாரதி நகர்’ என்ற பெயரைப் பார்த்தவுடன், "இது யார் பெயர் தெரியுமா?" என்கிறத் தகவலைச் சொன்னார் அமைச்சர்.

MEER VERHALEN VAN Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?

முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

வெளிநாட்டு நிதியைச் செலவிட என்ஜிஓ-க்களுக்கு கட்டுப்பாடு

அபராதத் தொகையை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

சமரி அதிரடி சதம்; இலங்கை வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

அதிகாரம் பெற வேண்டும் பெண்கள்!

பெண்கள் முன்னேற்றம் மற்றும் அதிகாரமளித்தல் என்பது குறித்து நாம் பேசும் போதெல்லாம் 'கண்ணாடிக் கூரையை உடைத்தல்' என்ற உவமையை அடிக்கடி பயன்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்வது பழக்கமாகி விட்டது.

time to read

3 mins

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

'திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா'

உண்மையான திரிணமூல் காங்கிரஸ் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை அவரது அணி செவ்வாய்க்கிழமை அனுப்பியது.

time to read

1 mins

June 24, 2026

Translate

Share

-
+

Change font size