Poging GOUD - Vrij
யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?
Dinamani Karur
|April 22, 2025
எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்
-
யாருடைய ஆட்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கட்டமைப்புகள் குறித்து கடும் விவாதம் நடைபெற்றது.
அதன் விவரம்: கோவிந்தசாமி (அதிமுக): திமுக ஆட்சியில் நம்மைக் காக்கும் 48 திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 3 லட்சத்து 57 ஆயிரம் பேர் பயன் பெற்றதாகவும், அதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு பலன் கிடைத்ததாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கி வரும் போது, எதற்காக ஏன் நம்மைக் காக்கும் 48 திட்டம்?
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அதிக விபத்துகள் நிகழும் 500 இடங்கள் கண்டறியப்பட்டன. அந்த இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 723 மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தால் உயிர் பிழைத்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்து 843. இதற்காக ரூ.318.31 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் வருவாய், மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காகவே செலவு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தால் அரசு மருத்துவமனைகளும் பயன்பெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்திலும் இதேபோன்று தான் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள்.
கோவிந்தசாமி: எங்களுடைய ஆட்சிக் காலத்தில் சிகிச்சை முதலில் கொடுக்கப்பட்டது. காப்பீடு பின்னர் கோரப்பட்டது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: எந்த மருத்துவமனையில் அவ்வாறு கேட்கப்பட்டது என்பதைக் கூற வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி: எங்களுடைய உறுப்பினர் ஆதாரத்துடன் பேசுகிறார். பிரச்னை வரக்கூடாது என்பதற்காகவே கருத்துகளைத் தெரிவிக்கிறார்.
Dit verhaal komt uit de April 22, 2025-editie van Dinamani Karur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Karur
Dinamani Karur
திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்
நீட் விலக்கு தொடங்கி மாநில உரிமைகள் சார்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும் திமுகவை பின்பற்றிதான் தவெக அரசு செயல்பட முடியும் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
June 14, 2026
Dinamani Karur
தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனையானது.
1 min
June 14, 2026
Dinamani Karur
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Karur
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Karur
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Karur
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Karur
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Karur
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Karur
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Karur
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Translate
Change font size

