Poging GOUD - Vrij

அடர்த்தியின் அபாயம்!

Dinamani Kanyakumari

|

May 08, 2025

இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிர் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது.

- டி.எஸ். தியாகராசன்

இது நாள் வரை உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு எனப் பெயர் பெற்றிருந்த வல்லரசு சீனாவைப் பின்னுக்குத் தள்ளி பாரதம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது மனித வளத்தின் வளர்ச்சி அறிகுறியா? இல்லை அடர்த்தியின் அபாய குறியீடா? என்பதை மானுடவியல் ஆய்வாளர்களும், புவியியல் விஞ்ஞானிகளும், பொருளாதார வல்லுநர்களும், இன்ன பிற துறை சார்ந்த அறிஞர்களும் காலம் தாழ்த்தாது உடனே சிந்தித்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சற்றேறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் மகாகவி பாரதி, 'முப்பது கோடி முகமுடையாள், நாங்கள் முப்பது கோடி ஜனங்களும், முப்பது கோடி வாய் முழங்கவும், முப்பது கோடியும் வாழ்வோம்' என்று தனது கவிதைத் தோட்டத்தில் 30 கோடி மலர்களாக பாரதத்தின் மக்கள்தொகையை வர்ணித்தார். இன்றைக்கு 142 கோடியாக பல்கிப் பெருகியுள்ளது. உலகில் வேறு எந்த நாடும் செய்திராத சாதனையை, பாரதம் தனது மக்கள்தொகைப் பெருக்கத்தால் சாதித்துள்ளது. 12,69,219 சதுர மைல் பரப்பு உள்ள நம் நாட்டில் 142 கோடி மக்கள்தொகை. எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?

திருக்கோவலூரில் இடைகழியில் ஒருவர் படுத்திருந்த இடத்துக்கு மற்றொருவர் வர அவ்விருவரும் அமர்ந்து கொண்டனர். மீண்டும் ஒருவர் வர, பின்னர் மூவரும் எழுந்து நிற்க என ஆழ்வார்கள் பாடிய திருப்பாசுரம் குறிப்பிட்டதைப் போல பாரதத்தில் மக்கள் அனைவருக்கும் நிற்க இடமாவது இருக்குமா? என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதொன்று.

சீனாவின் தற்போதைய மக்கள்தொகை 140 கோடிதான். நிலப்பரப்பில் பாரதத்தைவிட இரண்டு மடங்கென விரிந்துள்ளது. ஆம். 37,05,407 சதுர மைல். உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் மக்கள்தொகை 33 கோடி 29 லட்சம் மட்டுமே! இதில் உலகெங்கினும் உள்ள பிற நாட்டவர் குடியேறியவர்களின் தொகையும் சேர்ந்துள்ளது. ஆனால், நிலப்பரப்போ 37,96,742 சதுர மைல். பாரதத்தின் நிலப்பரப்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

ஒருகாலத்தில் பிரித்தானிய பேரரசு தனது காலனி நாடாகக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை வெறும் 2 கோடியே 73 லட்சம்தான். ஆனால், நிலப்பரப்போ 29,68,464 சதுர மைல். இதுவும் பிரித்தானிய அரசு அன்றைய நாளில் தனது காலனி நாடுகளில் அவர்களின் சட்டப்படி குற்றவாளிகள் எனச் சொல்லப்பட்டவர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்திய பிறகும்!

MEER VERHALEN VAN Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஹாட்ரிக் வெற்றி: காலிறுதியில் இந்தியா

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் சுவிட்சர்லாந்தை 5-0 என வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்ட இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

time to read

1 mins

December 03, 2025

Dinamani Kanyakumari

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

time to read

1 min

December 03, 2025

Dinamani Kanyakumari

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Dinamani Kanyakumari

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Kanyakumari

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Translate

Share

-
+

Change font size