Poging GOUD - Vrij
தரமான கல்வி... வளமான வாழ்வு!
Dinamani Kanyakumari
|April 19, 2025
பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.
கற்றோருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பது கல்விக்கு சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம். பிள்ளைப் பிராயத்தில் சரியான வகையில் கல்வி புகட்டப்பட வேண்டும். இது பெற்றோரின் கடமை மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒட்டுமொத்த பொறுப்புமாகும். அரசாங்கம் எல்லாவகையிலும் இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வி கிடைப்பதற்கு உரிய கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், மற்ற நிர்வாக அமைப்புகள் ஆகியவை நிறைவேற உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது தேசத் தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 1948-49 இல் அமைத்த கமிஷன் உயர் கல்வியை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பரிந்துரை அளித்தது. 1952-53 இல் டாக்டர் லக்ஷ்மணசாமி முதலியார் தலைமையில் இடைநிலைக் கல்வி பிரச்னைகள் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1968-ஆம் ஆண்டு கல்விக்கான திட்டம் முதலில் கொள்கை அளவில் வகுக்கப்பட்டது. அதன்படி, தேசிய வளர்ச்சி, தேசிய ஒருங்கிணைப்பு, ஒற்றுமை முக்கிய இலக்காக வைக்கப்பட்டது. 1990 இல் எல்லாருக்குமான கல்வி என்ற முழக்கம் உலகெங்கிலும் பரவியது. அதன் விளைவாக, 2002 ஆம் ஆண்டு கல்வி அடிப்படை உரிமையாக 86-ஆவது அரசியல் சாசன திருத்தம் மூலம் 21 ஆ பிரிவு சேர்க்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு 6 வயதிலிருந்து 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி உறுதி செய்யப்பட்டது.
ஐ.நா.சபை 2015-ஆம் ஆண்டு நாடுகள் அடைய வேண்டிய வளர்ச்சிக்கான இலக்குகளை அறிவித்தது. தரமான கல்வி அளிப்பது, பாரபட்சமற்ற உயர் கல்வி ஆகியவை அதன் முக்கியமான இலக்குகள். இதன் பின்னணியில்தான் டாக்டர் கஸ்தூரிரங்கன், மேனாள் இஸ்ரோ சேர்மன் தலைமையில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையைத் தயாரிக்க ஜூன் 2017 ஆம் ஆண்டு குழு அமைத்தது.
Dit verhaal komt uit de April 19, 2025-editie van Dinamani Kanyakumari.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Kanyakumari
பொதுக் குழுவைக் கூட்டினால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு
சி.வி.சண்முகம் திட்டவட்டம்
1 min
May 20, 2026
Dinamani Kanyakumari
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Kanyakumari
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Kanyakumari
தென் கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு
வட கொரிய அதிபர் உத்தரவு
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் தமிழக அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
May 19, 2026
Translate
Change font size

