Poging GOUD - Vrij
தரமான கல்வி... வளமான வாழ்வு!
Dinamani Dharmapuri
|April 19, 2025
பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.
கற்றோருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பது கல்விக்கு சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம். பிள்ளைப் பிராயத்தில் சரியான வகையில் கல்வி புகட்டப்பட வேண்டும். இது பெற்றோரின் கடமை மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒட்டுமொத்த பொறுப்புமாகும். அரசாங்கம் எல்லாவகையிலும் இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வி கிடைப்பதற்கு உரிய கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், மற்ற நிர்வாக அமைப்புகள் ஆகியவை நிறைவேற உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது தேசத் தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 1948-49 இல் அமைத்த கமிஷன் உயர் கல்வியை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பரிந்துரை அளித்தது. 1952-53 இல் டாக்டர் லக்ஷ்மணசாமி முதலியார் தலைமையில் இடைநிலைக் கல்வி பிரச்னைகள் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1968-ஆம் ஆண்டு கல்விக்கான திட்டம் முதலில் கொள்கை அளவில் வகுக்கப்பட்டது. அதன்படி, தேசிய வளர்ச்சி, தேசிய ஒருங்கிணைப்பு, ஒற்றுமை முக்கிய இலக்காக வைக்கப்பட்டது. 1990 இல் எல்லாருக்குமான கல்வி என்ற முழக்கம் உலகெங்கிலும் பரவியது. அதன் விளைவாக, 2002 ஆம் ஆண்டு கல்வி அடிப்படை உரிமையாக 86-ஆவது அரசியல் சாசன திருத்தம் மூலம் 21 ஆ பிரிவு சேர்க்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு 6 வயதிலிருந்து 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி உறுதி செய்யப்பட்டது.
ஐ.நா.சபை 2015-ஆம் ஆண்டு நாடுகள் அடைய வேண்டிய வளர்ச்சிக்கான இலக்குகளை அறிவித்தது. தரமான கல்வி அளிப்பது, பாரபட்சமற்ற உயர் கல்வி ஆகியவை அதன் முக்கியமான இலக்குகள். இதன் பின்னணியில்தான் டாக்டர் கஸ்தூரிரங்கன், மேனாள் இஸ்ரோ சேர்மன் தலைமையில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையைத் தயாரிக்க ஜூன் 2017 ஆம் ஆண்டு குழு அமைத்தது.
Dit verhaal komt uit de April 19, 2025-editie van Dinamani Dharmapuri.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 அடி உயர மலை உச்சியில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
1 mins
December 04, 2025
Dinamani Dharmapuri
மார்க்ரம் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Dharmapuri
16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை
16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Dharmapuri
4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை
தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
1 min
December 04, 2025
Dinamani Dharmapuri
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
December 04, 2025
Dinamani Dharmapuri
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
December 04, 2025
Dinamani Dharmapuri
சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
December 04, 2025
Dinamani Dharmapuri
6 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 4) 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Dharmapuri
உள்ளூர் மொழியறிதல் அவசியம்!
அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.
2 mins
December 04, 2025
Dinamani Dharmapuri
ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.
1 min
December 04, 2025
Translate
Change font size
