திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.846.47 கோடி மதிப்பீட்டிலான 1,234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
DINACHEITHI - NELLAI
|July 11, 2025
சென்னை ஜூலை 11தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (10.7.2025) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 73 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 1234 முடிவுற்றபணிகளை திறந்து வைத்து, 172 கோடியே 18 இலட்சம்ரூபாய்மதிப்பீட்டிலான 2423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 600 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 67,181 பயனாளிகளுக்கு வழங்கினார்.
-
திருவாரூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், திருவாரூர் மாவட்டத்தின் புதிய ஊராட்சி மன்ற அலுவலகங்கள், பொது விநியோகக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், கோ-லொகேஷன் சென்டர், பள்ளிக் கட்டடங்கள், பொது நூலகக் கட்டடங்கள், பேருந்து நிழற்குடைகள், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், நேரடி கொள்முதல் நிலையங்கள், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் என மொத்தம் 42 கோடியே 8 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் 1209 முடிவுற்ற பணிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 9 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம், மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் செலவில் சீமாங்க் கட்டடம், ஆதிச்சபுரத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் பொது சுகாதார அலகு கட்டடம், பெரும்புகலூரில் 20 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையம், கூத்தாநல்லூரில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கடுவங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 52 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கலை பண்பாட்டு அறை, ஆய்வகம் மற்றும் நூலகம் கட்டடங்கள்: பொது நூலகத் துறை சார்பில், உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை மற்றும் எடையூர் ஆகிய இடங்களில் 66 இலட்சம் ரூபாய் செலவில் கிளை நூலகங்கள்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நன்னிலம் பேரூராட்சி, மணவாளன்பேட்டையில் 19 இலட்சம் ரூபாய் செலவில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கொற்கை கால்நடை பண்ணையில் 1 கோடியே 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் வற்றுப் பசுக்களுக்கான வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கொட்டகை, 1 கோடியே 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கறவைப் பசுக்கள் மற்றும் கன்றுகளுக்கான கான்கிரீட் கொட்டகை, 25 இலட்சம் ரூபாய் செலவில் பண்ணை மேலாளர் அலுவலகக் கட்டடம், 30 இலட்சம் ரூபாய் செலவில் கறவைப் பசுக்களுக்கான கொட்டகை;
Dit verhaal komt uit de July 11, 2025-editie van DINACHEITHI - NELLAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
சி, டி. பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ. 3 ஆயிரம்
தமிழக அரசு அறிவிப்பு
1 min
January 02, 2026
DINACHEITHI - NELLAI
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.
1 min
January 02, 2026
DINACHEITHI - NELLAI
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை: டிரோன்களுக்கு தடை
துணை ஜனாதிபதியாக சி. பி. ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
1 min
January 02, 2026
DINACHEITHI - NELLAI
சிகரெட், பீடி விலை உயர்வு: புதிய வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
January 02, 2026
DINACHEITHI - NELLAI
காய்ச்சல், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தும் ‘நிம்சுலைடு’ மருந்துக்கு மத்திய அரசு தடை
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது.
1 min
January 02, 2026
DINACHEITHI - NELLAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - NELLAI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - NELLAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
DINACHEITHI - NELLAI
முன்னாள் மத்திய மந்திரி சிவராஜ் பாட்டீல் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
1 min
December 13, 2025
Translate
Change font size

