Poging GOUD - Vrij
எங்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாத விழாவாக நடந்தது, திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம்
DINACHEITHI - NELLAI
|July 09, 2025
பொது மக்கள் பாராட்டு
-
திராவிட மாடல் அரசின் சட்டம் ஒழுங்கைப் பறைசாற்றும் ஒரு முத்திரை விழா, திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம்.
தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் திருமுருகப் பெருமானுக்குத் தமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் படை வீடுதிருச்செந்தூர் திருக்கோயில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன், திருச்செந்தூர் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா 7.7.2025 திங்கள்கிழமை காலை 6.50 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த குடமுழுக்குவிழா தமிழ்நாடு அரசின் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு. அனிதா இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தமிழ் மறைகள் முழங்கிட தருமபுர ஆதினம், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், சிருங்கேரி சாரதா பீடாதிபதி சாமிகள் முதலானோர் சூழ வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச் செந்தூரின் கடலோரத்தில் கூடிய கூட்டம் தலையா, கடல் அலையா என ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரிகள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் பல ஆண்டுகளாக முழங்கி வருவதை எவரும் மறந்திட முடியாது.
அந்த அளவுக்கு திருச்செந்தூர் கோயிலைச் சூழ்ந்த நாற்புறங்களிலும், கடலோரத்தில் மணலே தெரியாத அளவுக்கு இலட்சக் கணக்கான மக்கள் கூடியிருந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சி வழியாக குட முழுக்கு விழாவைப் பார்த்து மகிழ்ந்த மக்கள் அனைவரும் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.
Dit verhaal komt uit de July 09, 2025-editie van DINACHEITHI - NELLAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு
காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
1 min
December 01, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
DINACHEITHI - NELLAI
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு
“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - NELLAI
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்
மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min
November 29, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்
சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
1 mins
November 29, 2025
DINACHEITHI - NELLAI
சென்னைக்கு 410 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல்: மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.
1 min
November 29, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது
2 mins
November 29, 2025
DINACHEITHI - NELLAI
நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம்
சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் பட்டமளிப்பு விழாவில், நடிகர் சிவக்குமார், ஓவியர் குருசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.
1 mins
November 29, 2025
DINACHEITHI - NELLAI
“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு
\"எஸ்.ஐ.ஆர், படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும். உறவினர் பெயர் கட்டாயம் அல்ல\" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.
1 min
November 28, 2025
DINACHEITHI - NELLAI
மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் - உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
1 min
November 28, 2025
Translate
Change font size

