Facebook Pixel ரூ.517 கோடி செலவில் 90 முடிவுற்ற பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் | DINACHEITHI - NAGAI - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

ரூ.517 கோடி செலவில் 90 முடிவுற்ற பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

DINACHEITHI - NAGAI

|

June 27, 2025

வேலூர் மற்றும் திருப்பத்தூர்மாவட்டங்களில் அரசுவிழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்றுமுன்தினம் (25.6.2025) சென்னை, சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்ற மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்குகாட்பாடிஇரயில்நிலையத்தில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், வேலூர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

பின்னர், வேலூர் மாவட்டம், பூதூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் (26.6.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்

MEER VERHALEN VAN DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சில செய்தி நிறுவனங்கள் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.

time to read

2 mins

April 30, 2026

DINACHEITHI - NAGAI

காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது

தமிழ்நாடு டிஜிபி அதிரடி உத்தரவு

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மேற்கு வங்கத்தில் 93 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - NAGAI

தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகிறார்கள்

வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

April 30, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணிக்கைக்காக 62 மையங்கள் அமைப்பு

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

புதுவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடக்கம்

புதுவை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சிக்கிமில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி சிக்கிம் மாநிலம் நிறுவப்பட்டதன் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கேங்டாக் வந்தார்.

time to read

1 min

April 29, 2026

DINACHEITHI - NAGAI

புதுவை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம் - தி.மு.க. போராட்டம் அறிவிப்பு

புதுச்சேரியின் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் அறிவித்துள்ளது.

time to read

1 min

April 28, 2026

DINACHEITHI - NAGAI

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட் உத்தரவு

சென்னை ராயபுரம் தொகுதியில் அ. தி. மு. க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் கூறி, இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என ராயபுரத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

time to read

1 min

April 28, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் நடைப்பயிற்சி

செல்பி, புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

time to read

1 min

April 27, 2026

Translate

Share

-
+

Change font size