Poging GOUD - Vrij
கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
DINACHEITHI - NAGAI
|June 06, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.
-
மேலும், 1400 வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.
மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் சவாலாக தற்போது காலநிலை மாற்றம் உள்ளது. அதனை எதிர்கொள்ள இவ்வரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, இயற்கைப் பாதுகாப்பினையும் வளங்குன்றா வளர்ச்சியையும் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை ஒழித்திட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை "திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன் தமிழ்நாடு மீன் வலை முன்னெடுப்பின் கீழ், சென்னை காசிமேட்டில் நிறுவப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்வலை சேகரிப்பு மையம் மூலம் கைவிடப்பட்ட மீன் வலைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதால் கடலில் நெகிழி மாசுபாடு குறைந்து, கடல் பல்லுயிரியம் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக் காத்திட இவ்வரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இம் மையத்திற்கான கட்டடம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பசுமை கட்டடமாக உருவாக்கப்படும். இக்கட்டடத்தின் மொத்த நிலப்பரப்பு 16,555 சதுர அடி மற்றும் மொத்த கட்டுமானப் பரப்பளவு 46,823 சதுர அடி ஆகும்.
Dit verhaal komt uit de June 06, 2025-editie van DINACHEITHI - NAGAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
முதல்வர் விஜய்-மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஜல் ஜீவன் இயக்க திட்டம் நீடிப்பு ஒப்பந்தம், நேற்று முதல் அமைச்சர் விஜய் - மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இடையே காணொலி காட்சி வழியே நடந்த கூட்டத்தில் கையெழுத்தானது.
1 mins
June 03, 2026
DINACHEITHI - NAGAI
இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து
இசைஞானி இளையராஜா நேற்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
1 min
June 03, 2026
DINACHEITHI - NAGAI
கல்வி கட்டண விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் - தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு
மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்பட வேண்டும்.
1 min
June 03, 2026
DINACHEITHI - NAGAI
உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்
மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
1 min
June 02, 2026
DINACHEITHI - NAGAI
தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - NAGAI
தமிழக அமைச்சரிடம் ரூ. 4,000 வாங்கிக் திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பேட்டி
1 mins
May 30, 2026
DINACHEITHI - NAGAI
பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்
தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.
1 min
May 30, 2026
DINACHEITHI - NAGAI
கடும் வெயிலால் பொதுமக்கள் தவிப்பு: சென்னையில் மேலும் 2 நாட்கள் வெப்ப அலை நீடிக்கும்
கோடை காலத்தில் சென்னையில் ஏற்பட்ட காலமாற்றத்தால் வங்க கடலில் இருந்து ஈரப்பதம் கொண்ட வடகிழக்கு கடல் காற்று வீசியதால் நேற்று வெப்பம் தணிந்து இருந்தது.
1 min
May 25, 2026
DINACHEITHI - NAGAI
வி.சி.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
1 min
May 25, 2026
DINACHEITHI - NAGAI
உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக இந்தியா மாறும்: ராஜ்நாத் சிங் பேச்சு
மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையும், தனியார் துறையின் புதிய கண்டுபிடிப்புகளும் ஒன்றாக இணையும்போது, நாடு புதிய உச்சங்களை தொடும் என ராஜ்நாத் சிங் கூறினார்.
1 min
May 25, 2026
Translate
Change font size
