Poging GOUD - Vrij
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம்
DINACHEITHI - KOVAI
|September 05, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், இங்கிலாந்து நாட்டின், இலண்டன் நகரில் உள்ள வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில், இங்கிலாந்து அமைச்சர், நாடாளுமன்ற துணை செயலாளர் (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட் அவர்களை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடு- இங்கிலாந்து ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பு. உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
-
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றங்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் படி இன்சூரன்சு மாத தவணைத்தொகை குறைகிறது. சிகரெட்டுக்கு 40 சதவீதவரி விதிக்கப்பட்டுள்ளது. பால், வெண்ணை விலை குறைகிறது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். ஜி.எஸ். டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
முன்னதாக இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ். டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன. நாட்டின் மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
Dit verhaal komt uit de September 05, 2025-editie van DINACHEITHI - KOVAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
2 mins
February 24, 2026
DINACHEITHI - KOVAI
நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).
1 min
February 24, 2026
DINACHEITHI - KOVAI
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை
மத்திய மந்திரி ஜெய் சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
February 24, 2026
DINACHEITHI - KOVAI
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.
2 mins
February 24, 2026
DINACHEITHI - KOVAI
2 நாட்கள் சுற்றுப்பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகிறார்
25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 mins
February 24, 2026
DINACHEITHI - KOVAI
நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 mins
February 22, 2026
DINACHEITHI - KOVAI
தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று பேச்சுவார்த்தை
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 22, 2026
DINACHEITHI - KOVAI
டெல்லி செங்கோட்டை, முக்கிய கோவில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
1 min
February 22, 2026
DINACHEITHI - KOVAI
இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்
டெல்லியில் நேற்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
February 22, 2026
DINACHEITHI - KOVAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார், ஓ. பன்னீர் செல்வம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
1 min
February 21, 2026
Translate
Change font size

