Poging GOUD - Vrij
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்
DINACHEITHI - DHARMAPURI
|May 21, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
-
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி. வில்சன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராணிமேரி கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில "தமிழ்ப்புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடங்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.269.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, இராணி மேரி கல்லூரியில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடம் இராணி மேரி கல்லூரியில் 22.11.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், இராணி மேரி கல்லூரி வளாகத்திலேயே மாணவியர் தங்கிப் படிப்பதற்கு ஏதுவாக விடுதி ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என மாணவியர்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை உடனே ஏற்றுக் கொண்டு விழா மேடையிலேயே விடுதி கட்டித் தரப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
Dit verhaal komt uit de May 21, 2025-editie van DINACHEITHI - DHARMAPURI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்
மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?
மத்திய அரசு மறுப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - DHARMAPURI
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு
தமிழக அரசு அறிவிப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - DHARMAPURI
மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு
, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
1 min
March 06, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!
1 min
March 06, 2026
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல்
இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
1 min
March 05, 2026
DINACHEITHI - DHARMAPURI
முதல்வர் மு.க.ஸ்டாலின் - செல்வ பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி. மு. க. வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.
1 min
March 05, 2026
DINACHEITHI - DHARMAPURI
கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min
March 04, 2026
DINACHEITHI - DHARMAPURI
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது
பிரதமர் மோடி பேட்டி
1 min
March 03, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு
மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
1 min
March 03, 2026
Translate
Change font size
