Poging GOUD - Vrij
ஏ.டி.ஜி.பி. ஜெயராமுடன் பெண்ணின் தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி?
DINACHEITHI - CHENNAI
|June 18, 2025
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ளதனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும்வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி. குப்பம் எம். எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.
பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்வம் தமிழகம் முழுவதும் பெரும் பரபர ப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
வழக்கில் ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்ததோடு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் வனராஜ். இவர் தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் கடமலைக்குண்டு அருகே உள்ள செங்குளத்தில் தேங்காய் குடோன் வைத்து தனது தொழிலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார்.
மதுரையைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தொண்டு நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். வருசநாடு பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தபோது வனராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. மகேஸ்வரி சப்- இன்ஸ்பெக்டராக கடந்த 1990ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளில் அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
பரபரப்பு தகவல்கள்
Dit verhaal komt uit de June 18, 2025-editie van DINACHEITHI - CHENNAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
DINACHEITHI - CHENNAI
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு
“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - CHENNAI
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - CHENNAI
சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு
காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
1 min
December 01, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையை நெருங்கியது டிட்வா புயல்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
November 30, 2025
DINACHEITHI - CHENNAI
டிசம்பர் மாதத்தில் 3 மெகா திட்டங்கள்- தமிழக அரசு அறிவிக்கிறது
தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
1 mins
November 30, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழகத்திற்கு மேலும் 10 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைப்பு
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்ட உள்ளதாக துணை கமாண்டர் தெரிவித்துள்ளார்.
1 min
November 30, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது
2 mins
November 29, 2025
DINACHEITHI - CHENNAI
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்
மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min
November 29, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்
சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
1 mins
November 29, 2025
Translate
Change font size

