Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

கலைக்காகவே கலைஞர்கள் காக்கத்தான் யாரும் இல்லை

Virakesari Weekly

|

May 11, 2025

பொருளாதார ரீதியாக இந்த கூத்துகளை திறம்பட நடத்துவதற்கு கலைஞர்களை ஊக்குவிக்க யாரும் முன்வருவதில்லை. அழியும் கலையை அழியாமல் பாதுகாக்க முயற்சிக்கும் கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கிடல் அவர்களது அரசியல் பிரதிநிதிகளின் முக்கிய கடமையாகும் என்பதனை யாரும் உணருவதில்லை. அவர்களுக்கான பாதுகாப்பை யார் உறுதிப்படுவது என்ற தெளிவும் இல்லை. இதன் விளைவுதான் அண்மையில் அனைவரது உயிரையும் உருக்குலைய வைத்த சம்பவமாகும்.

ஆம் 60 அடி உயரத்திலுள்ள கம்பத்தில் ஏறிய கூத்து கலைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். நானு ஓயா கிளாசோ தோட்ட பகுதியில் இடம்பெற்ற பொன்னர் சங்கர் கூத்தின் போதே கலைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த இந்த சம்பவம் நடைபெற்றது. கடந்த 27ஆம் திகதி அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த நபர் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நானு ஓயா கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த 63 வயதுடைய முருகன் சதாசிவம் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். கலைமீது அவருக்கு எத்தனை தாகமிருந்திருந்தால் 65 வயதில் வானுயர உள்ள 60 அடி உயரக்கம்ப மரத்தில் ஏறியிருப்பார். அவர் கலையை அதிகம் அதிகம் நேசித்ததாலோ என்னவோ கலையோடு சங்கமித்திருந்த போதே இவ்வுலகை விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏன் 60 அடி கம்பத்தில் ஏற வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது தொடர்பில் எல்பியன் தோட்டத்தை சேர்ந்த முத்து என்ற கூத்து கலைஞரை தொடர்பு கொண்டு வினவினோம். இவர் அருச்சுனன் தபசில் திரௌபதி வேடம் தரித்து நடித்தவர். அவரது கருத்துகள் இங்கே..

அருச்சுனன் தபசு மட்டுமே கம்பத்தில் ஏற வேண்டும் பொன்னர் சங்கருக்கு அவ்வாறான எதுவும் இல்லை என்று கூறுகிறார்களே எது உண்மை என்று கூறுங்கள்...?

பொன்னர் சங்கர்-அருச்சுனன் தபசு என்ற இரண்டுக்குமே கம்பம் ஏறுதல் என்ற நிகழ்வு உள்ளது. அருச்சுனன் தபசில் அருச்சுனன் வேடம் தரித்தவர் மரம் ஏறி தவம் இருப்பார். பொன்னர் சங்கர் கூத்தில் பொன்னர் சங்கரின் சகோதரி தங்காள் தனது சகோதரர்களின் உயிரை திரும்ப கொண்டு வர கம்பம் ஏறி தவம் இருந்து இறை அருளை பெறுவார் என்பதற்கு இணங்க தங்காள் வேடமிட்டவர் கம்பம் ஏறி பெரியகாண்டி அம்மனின் அருளை வேண்டுவார்.

60 அடி உயர கம்பம் ஏற வேண்டும் என்பது விதியா.. அதனை விட குறைவான உயரத்தில் கம்பம் கட்டப்பட்டு ஏறலாமா....?

FLERE HISTORIER FRA Virakesari Weekly

Virakesari Weekly

மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு

வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்

பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்

இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அடுத்த கட்ட சாணக்கியம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.

time to read

3 mins

June 29, 2025

Virakesari Weekly

ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

சிக்கிக் கொண்ட கடற்படை

இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.

time to read

2 mins

June 29, 2025

Virakesari Weekly

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி

பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.

time to read

1 min

June 29, 2025

Translate

Share

-
+

Change font size