Prøve GULL - Gratis

முத்தரப்பு சிக்கலுக்குள் எரிசக்தி பாதுகாப்பு

Virakesari Weekly

|

May 11, 2025

அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று வல்லரசு நாடுகளுக்கும் இடையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு சிக்கிக் கொள்ளுகின்ற நிலை உருவாகியிருக்கிறது.

- ஹரிகரன்

முத்தரப்பு சிக்கலுக்குள் எரிசக்தி பாதுகாப்பு

அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று வல்லரசு நாடுகளுக்கும் இடையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு சிக்கிக் கொள்ளுகின்ற நிலை உருவாகியிருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இந்த மூன்று நாடுகளுடனும் எரிசக்தி தொடர்பாக உடன்பாடுகளை செய்திருக்கிறது அல்லது பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக் கவின் சீனப் பயணத்தின் போது அம்பாந்தோட்டையில், சீனாவின் சினோபெக் நிறுவனம் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு கொண்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு பயணத்தின் போது, திருகோணமலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா ஆகிய நாடுகளுடன் இணைந்து எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் விநியோகக் கேந்திரத்தை உருவாக்கும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள வரிகள் தொடர்பான பேச்சுக்குச் சென்ற இலங்கை குழுவினர் அமெரிக்காவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியம் குறித்து பேச்சுக்களை நடத்தியிருக்கின்றனர்.

இலங்கை ஒரு சிறிய தீவு. 21 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு.

இங்கே வரையறுக்கப்பட்டளவு எண்ணெய் தேவையே உள்ளது.

ஆனால், இதன் எரிசக்தி கட்டமைப்பை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவின் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் திருகோணமலையில் எரிபொருள் களஞ்சியங்களையும் எரிபொருள் சுத்திகரிப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது.

அந்நிறுவனத்திற்கு 213 எரிபொருள் விற்பனை நிலையங்களும் இருக்கின்றன.

அதுமாத்திரமன்றி அமெரிக்காவின் ஆர்.எம். பார்க், சீனாவின் சினோபெக் போன்ற நிறுவனங்களும், எரிபொருள் விற்பனை நிலையங்களை கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான எரிபொருள் விற்பனை நிலையங்கள், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடமே உள்ளன.

இவ்வாறான நிலையில், இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் இலங்கையின் எரிபொருள் சந்தையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு களம் இறங்கியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சீனாவில் இருந்து மிகப்பெரிய முதலீட்டை கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.

FLERE HISTORIER FRA Virakesari Weekly

Virakesari Weekly

மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு

வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்

பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்

இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அடுத்த கட்ட சாணக்கியம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.

time to read

3 mins

June 29, 2025

Virakesari Weekly

ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

சிக்கிக் கொண்ட கடற்படை

இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.

time to read

2 mins

June 29, 2025

Virakesari Weekly

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி

பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.

time to read

1 min

June 29, 2025

Translate

Share

-
+

Change font size