Prøve GULL - Gratis
ஐடி ஊழியர்கள் அடிமைகள் அல்ல
Theekkathir Daily
|30 May 2025
ஓலா நிறுவனத்தில் இயந்திர கற்றல் (மிஷன் லேனிங்) பொறியாளரான நிகில் சோமவன்ஷி இந்த மாத தொடக்கத்தில் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார். வேலை மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக ரெடிட்டிற் தளத்தில் ஒரு குறிப்பை முன்னதாகப் பகிர்ந்து கொண்டார்.
-
புனேவில் உள்ள எர்ன்ஸ்ட் & யங் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பட்டயக் கணக்காளராகப் பணிபுரிந்த கேரளப் பெண் அன்னா செபாஸ்டியன், கடந்த செப்டம்பரில் அதிக பணிச்சுமை காரணமாக மயங்கி விழுந்து இறந்தார். இந்த வகையில், ஐடி துறையில் ஊழியர்களின் தற்கொலைகள் மற்றும் இறப்புகளுக்கு பணியிடத்தில் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் சுரண்டல் முக்கியக் காரணம் ஆகும்.
நவீன காலத்தில் வேலைவாய்ப்புத் துறையில் தீவிரமாக இருக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று வேலை-வாழ்க்கைச் சமநிலை. நமது நாட்டில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டதன் மூலம், பணி கலாச்சாரத்தில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிரந்தர வேலைகள் குறைந்து, ஒப்பந்தமயமாக்கல் மற்றும் வெளிமுகமை (அவுட்சோர்சிங்) அதிகரித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன அல்லது பெருமளவில் மூடப்பட்டுள்ளன.
மோடி ஆட்சியில் வேலையின்மை மற்றும் ஒப்பந்தமயமாக்கல் பெருமளவில் அதிகரித்துள்ளது. தொழிலாளர் சட்டங்களை நீக்குவதன் மூலம் அரசாங்கமே சுரண்டலுக்கு வழி வகுத்துள்ளது. வாழ்வதற்காக வேலை தேடும் இளைஞர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியமற்றதாகியுள்ளது. நமது இளைஞர்கள் 'மகிழ்ச்சியை' இழந்து, பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் துன்பகரமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இயந்திர மனிதர்களாக மாறிவிட்டனர்.
அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்
ஆசிய மனநல சுகாதாரத்தின் 2023 அறிக்கையின்படி, நாட்டின் பூர்வீகத் தொழிலாளர்களில் 77 சதவிகிதம் பேர் மிதமான அல்லது கடுமையான மனநலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். 39 சதவிகிதம் பேர் அதிக ஆபத்தான மனநலப் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) ஆய்வு, உலகிலேயே அதிக வேலை நேரங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதைக் காட்டுகிறது. சராசரி இந்தியத் தொழிலாளி வாரத்திற்கு 46.7 மணிநேரம் வேலை செய்கிறார் என்பதையும் இது குறிக்கிறது. அதே ஆய்வு, 51 சதவிகித இந்தியத் தொழிலாளர்களும் வாரத்திற்கு 49 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதையும் காட்டுகிறது.
Denne historien er fra 30 May 2025-utgaven av Theekkathir Daily.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Theekkathir Daily
Theekkathir Daily
மது போதையில் இளைஞர்கள் ரகளை டாஸ்மாக் கடையை மாற்றக் கோரிக்கை
சேலத்தில் மதுபோதையில் இளைஞர்கள் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட நிலையில், மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
1 min
06 June 2025
Theekkathir Daily
ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடிக்கு ஒப்பந்தம்!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
1 min
06 June 2025
Theekkathir Daily
கொடிக்கம்பம் அகற்றத்திற்கு எதிரான சிபிஎம் வழக்கு தலைமைச் செயலாளரை இணைத்து நீதிமன்றம் உத்தரவு
கொடிக்கம்பங்களை அகற்று வதற்கு, இடைக்காலத் தடை கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது வெள்ளியன்று விசாரணை நடைபெறுகிறது.
1 min
06 June 2025
 Theekkathir Daily
சென்னை ஐஐடியில் இடம் பிடித்த சேலம் பழங்குடியின மாணவி
ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி.
1 mins
06 June 2025
Theekkathir Daily
960 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
1 min
06 June 2025
 Theekkathir Daily
அசாமில் வெள்ள நிலைமை மோசமடைகிறது: 7 லட்சம் பேர் பாதிப்பு ; 19 பேர் பலி
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாட்களாக கன மழை புரட்டியெடுத்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலம் கன மழையால் மிக மோசமான அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் ஆரஞ்சு எச்சரிக்கையுடன் கனமழை பெய்து வருவதால் அசாம் மாநிலத்தின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள் ளத்தில் தத்தளித்து வருகின்றன.
1 min
06 June 2025
 Theekkathir Daily
பசுமைப் பொருளாதாரமே இலக்கு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
1 min
06 June 2025
 Theekkathir Daily
‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்படாது!’
கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது ரயில்வே
1 mins
06 June 2025
Theekkathir Daily
விமானப்படையில் குரூப் 'சி' 153 பணியிடங்கள்
இந்திய விமான படையில் பணிபுரிந்து அனுபவம் பெற 153 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நிரப்பப்பட உள்ளனர்.
1 min
06 June 2025
 Theekkathir Daily
இந்தியாவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் உதவினார்!
பாக். பிரதமர் ஷெபாஸ் பகிரங்க பாராட்டு
1 min
06 June 2025
Translate
Change font size
