Prøve GULL - Gratis
நான்கு தெற்காசிய நாடுகளின் இளைஞர் புரட்சிகள்
Tamil Mirror
|September 17, 2025
வி கிதாசார ரீதியில் உலகில் மிகக் கூடுதலான இந்து மக்கள் வாழும் நாடான நேபாளத்தில் கடந்த வாரம் வெடித்த அரச எதிர்ப்புப் போராட்டத்தால் அந்நாட்டு அரசாங்கம் கவிழ்ந்தது.
ஆரப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களை அடுத்து, அந்நாட்டுப் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இராஜினாமா செய்ய நேர்ந்ததோடு, முன்னாள் பிரதம நீதியரசரான சுஷிலா கார்க்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜென் ஸீ (Gen Z) என அமெரிக்க ஆங்கிலத்திலும் ஜென் இசெட் என்று பிரிட்டிஷ் ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் 1997க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்து, தற்போது 13 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருக்கும் தலைமுறையினரின் போராட்டமாகவே வங்காள தேசத்தில் வெடித்த போராட்டம் நோக்கப்படுகிறது.
வறுமை, வேலைவாய்ப்பின்மை, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பாரியளவிலான ஊழல், ஆட்சியாளர்கள் தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தனிச் சலுகை வழங்குதல் ஆகியனவே நேபாள இளைஞர்களின் போராட்டத்துக்கான அடிப்படைக் காரணமாகும். ஆனால், திடீரென அரசாங்கம் 26 சமூக வலைத்தளங்களைத் தடை செய்தமையே அந்த எதிர்ப்பை போராட்டமாக வெடிக்கச் செய்த விசையாகும்.
கடந்த 4ஆம் திகதியே நேபாள அரசாங்கம் இத்தடையை விதித்தது. அச்சமூக வலைத்தளங்கள் பொய்யான செய்திகள், திரிபுபடுத்தல்கள், துவேசத்தைப் பரப்புதல், சமூகக் குழுக்களிடையே வைராக்கியத்தை பரப்புதல் என்பனவற்றில் ஈடுபடுவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நேபாள அரசாங்கம் அவற்றைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தது. இலங்கையிலும் சமூக வலைத்தளங்களின் நிலைமை அதுவாகும்.
ஆனால், நேபாளத்தில் சில சமூக வலைத்தளங்கள் மட்டுமே பதிவு செய்துகொள்ள இணக்கம் தெரிவித்தது. முகநூல், எக்ஸ் (டுவிட்டர்), வடஸ்அப் உள்ளிட்ட வலைத்தளங்கள் அதற்கு இணங்கவில்லை. எனவே, தான் அவற்றுக்கு இத்தடை விதிக்கப்பட்டது.
அத்தோடு, கடந்த 8 ஆம் திகதி இளைஞர்கள் அத்தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொலிஸார் இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சில மாணவர்கள் கொல்லப்பட்டனர். அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தது. இதன் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சமடைந்து பின்வாங்குவார்கள் என்று அரசாங்கமும் பொலிஸாரும் நினைத்த போதிலும், இது மேலும் மாணவர்கள் வெறி கொண்டு எழக் காரணமாகியது. எனவே, பாதுகாப்புத் துறையினர் மேலும் கொடூரமாக நடந்து கொண்டனர். அவ்வாறு 19 பேர் கொல்லப்பட்ட நிலையில், அரசாங்கம் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்கியது.
Denne historien er fra September 17, 2025-utgaven av Tamil Mirror.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
