Prøve GULL - Gratis

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு

Dinamani Virudhunagar

|

September 12, 2025

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான 10 நாள்கள் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, செப். 11:

மசோதாக்கள் மீது தமிழக ஆளுநர் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தொடுத்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு, ஆளுநர் தாமதப்படுத்திய மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியது.

மேலும், மசோதாக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பில் தெளிவுரை கோரும் வகையில் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் அனுப்பினார். அதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தக்கூடிய விவகாரம் என்பதால் அவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதிமுதல் விசாரணையை அரசியல் சாசன அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி பி.ஆர்.க வாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்கு ஆதரவாகவும் மத்திய அரசு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநில அரசுகள் வாதங்களை முன்வைத்தன.

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டதற்கு ஆதரவாகவும், குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்கு எதிராகவும் தங்களுடைய வாதங்களை முன்வைத்தன.

FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Virudhunagar

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Virudhunagar

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்

'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Virudhunagar

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Translate

Share

-
+

Change font size