Facebook Pixel குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு | Dinamani Virudhunagar - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு

Dinamani Virudhunagar

|

September 12, 2025

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான 10 நாள்கள் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, செப். 11:

மசோதாக்கள் மீது தமிழக ஆளுநர் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தொடுத்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு, ஆளுநர் தாமதப்படுத்திய மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியது.

மேலும், மசோதாக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பில் தெளிவுரை கோரும் வகையில் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் அனுப்பினார். அதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தக்கூடிய விவகாரம் என்பதால் அவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதிமுதல் விசாரணையை அரசியல் சாசன அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி பி.ஆர்.க வாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்கு ஆதரவாகவும் மத்திய அரசு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநில அரசுகள் வாதங்களை முன்வைத்தன.

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டதற்கு ஆதரவாகவும், குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்கு எதிராகவும் தங்களுடைய வாதங்களை முன்வைத்தன.

FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Virudhunagar

தியாகத்தின் உருவம் !

உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Virudhunagar

திமுகவை இயக்குவது பாஜகதான்

உதயநிதிக்கு அமைச்சர் பதில்

time to read

1 min

June 19, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Virudhunagar

திருமணத் தடை அகல...

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.

time to read

2 mins

June 19, 2026

Dinamani Virudhunagar

பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

உலகக் கோப்பை குத்துச்சண்டை: மீனாட்சி காலிறுதிக்குத் தகுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Virudhunagar

சமரசத்தின் விலை உயிர்களா?

தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

time to read

2 mins

June 19, 2026

Translate

Share

-
+

Change font size