Prøve GULL - Gratis
காலம் வழங்கிய கொடை!
Dinamani Virudhunagar
|August 01, 2025
சோழர்களின் கட்டடக்கலைக்கு ஆகச் சிறந்த உதாரணம் கங்கைகொண்ட சோழபுரம். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதே கம்பீரமாய் காட்சியளிக்கிறது. முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பழைமையான கங்கைகொண்ட சோழபுரம், சோழர்களின் வரலாற்றைப் பறைசாற்றுகிறது. தற்போதிருக்கும் டெல்டா மாவட்டம் முழுவதும் தனித்துவமான கட்டடக்கலையின் மூலம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தோற்ற அமைப்பு சற்று தஞ்சை பெரிய கோயிலைப் போல இருந்தாலும், இந்த இரண்டு கோயில்களும் தனித்துவமான கலைநயத்தை அடையாளப்படுத்துகின்றன.
சோழர்களின் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம். ராஜேந்திர சோழனால் நிறுவப்பட்டு சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் அதிகாரமையமாக விளங்கியது. கங்கை வரை படையெடுத்துச் சென்று பல வெற்றிகளைப் பெற்ற முதலாம் ராஜேந்திர சோழன் அந்த வெற்றியின் நினைவாக இந்த நகரத்தையும், கோயிலையும் கட்டினார். கங்கையை வென்ற சோழனின் நகரம் என்பதே கங்கைகொண்ட சோழபுரத்தின் பொருளாகும்.
இன்றளவும் உலக அளவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சோழர்களின் கலை, கட்டடக்கலை மற்றும் கலாசாரத்தின் உன்னதத்தை இன்றும் தாங்கி நிற்கிறது. ஆனால், கோயிலின் மேல் பகுதி சுமார் 55 மீட்டர் உயரம் கொண்டது. இது தஞ்சாவூர் பெரிய கோவிலைவிட சற்று குறைவான உயரம் உடையது என்றாலும், அதன் வளைந்த மற்றும் நேர்த்தியான அமைப்பு தனித்துவமானது.
கோயிலின் கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது தினமும் சூரிய ஒளி நேரடியாக விழுந்து நந்தியின் மீது பிரதிபலித்து சிவலிங்கத்தை ஒளிர்விப்பது காணக்கிடைக்காத கட்டட கலையின் அரிய நிகழ்வாகும். தொல்காப்பியம் மேற்கோளிட்டுக் காட்டிய, 'வடவேங்கடம் முதல் தென்குமரி வரை, வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும்' என்றிருந்த தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளை மிகக் குறுகிய காலத்திலேயே மாற்றி அமைத்தவர் ராஜேந்திர சோழன்.
தனது ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதுடன் கடல் கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவர் ராஜேந்திர சோழன். கி.பி. 1014-இல் அரசனாகப் பொறுப்பேற்ற ராஜேந்திர சோழன் 1017-இல் இலங்கை மீது படையெடுத்து வென்றார். இந்த வெற்றியை இலங்கை வரலாற்றைக் கூறும் மகா வம்சம் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது.
இலங்கையில் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் புலனுருவ, திரிகோணமலை, அத்தரகுழளியா, பெரியகுளம், மாதோட்டம், நித்தவினோதம், கனதாரவ முதலிய இடங்களில் உள்ளன. அதேபோல் கடாரம் வெற்றியும் ராஜேந்திர சோழனின் முக்கிய சாதனையாகும். லெய்டன் செப்பேட்டில் கடார வெற்றி தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Denne historien er fra August 01, 2025-utgaven av Dinamani Virudhunagar.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Virudhunagar
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Virudhunagar
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Virudhunagar
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Virudhunagar
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Virudhunagar
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Virudhunagar
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Virudhunagar
அன்புள்ள ஆசிரியருக்கு...
நடுத்தர மக்களின் வளர்ச்சி
1 min
October 31, 2025
Dinamani Virudhunagar
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Virudhunagar
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
1 mins
October 31, 2025
Translate
Change font size
