Prøve GULL - Gratis
புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடக்கம்
Dinamani Villupuram
|August 15, 2025
புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடங்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
-
மதுரை, ஆக. 14:
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் யாசர் அராபத் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கர் ஜிவால் தற்போது பணியாற்றி வருகிறார். வருகிற 31-ஆம் தேதியுடன் இவரது பணிக்காலம் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போதைய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதே பொறுப்பில் கால நீட்டிப்பு செய்யப்படலாம் அல்லது யாரேனும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. இது உச்சநீதிமன்றத்தீர்ப்புகளுக்கு எதிரானது. மாநில அரசால் வழங்கப்படும் மூத்த காவல் துறை அதிகாரிகள் (ஐபிஎஸ்) பட்டியலைக் கொண்டு, தமிழக புதிய டிஜிபி வெளிப்படைத்தன்மையுடன் நியமிக்கப்பட வேண்டும்.
வருகிற 2026-இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களுக்குச் சாதகமானவர்களை பொறுப்பில் வைத்துக் கொள்ள மாநில அரசு விரும்புவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஆணவக் கொலை, கொள்ளை போன்ற அச்சமூட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட டிஜிபி பணியிடம் முறையாக நிரப்பப்படுவது அவசியம்.
இதுதொடர்பாக நடவடிக்கை கோரி, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசின் முதன்மைச் செயலர், உள்துறைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
டிஜிபி தேர்வு நியமனம் தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, அவர் பொறுப்பு டிஜிபியாக தொடரவோ, அவரது பணிக்காலத்தை நீட்டிப்பு செய்யவோ கூடாது. இதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியினார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வு முன் வியாழக்கிழமை முற்பகலில் விசாரணைக்கு வந்தது.
Denne historien er fra August 15, 2025-utgaven av Dinamani Villupuram.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Villupuram
Dinamani Villupuram
நீலகிரி மாவட்ட சுகாதார, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு எஸ்பிஐ ரூ.1.59 கோடி நிதி
தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிலையான திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களை ஊக்குவிக்கவும் எஸ்பிஐ ரூ.1.59 கோடி 'சிஎஸ்ஆர்' நிதியை வழங்கியுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Villupuram
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Villupuram
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Villupuram
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Villupuram
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Villupuram
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Villupuram
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Dinamani Villupuram
பரோல் வழங்கும் நடைமுறை: உயர்நீதிமன்றம் புதிய முடிவு
குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிக்கப்போவதாக சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டது.
1 min
June 11, 2026
Dinamani Villupuram
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Villupuram
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Translate
Change font size

