Facebook Pixel சங்கப் புலவரின் சான்றாண்மை | Dinamani Villupuram - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

சங்கப் புலவரின் சான்றாண்மை

Dinamani Villupuram

|

July 20, 2025

பரிசில் பெற்று வாழும் சங்கப் புலவர்கள் புரவலர்களை வாழ்க்கையரேனும் எவர்க்கும் அஞ்சாது யாண்டும் மெய்யே கூறி அறம் நிலைக்கச் செய்யும் சான்றோராக விளங்கியதைப் புறநானூறு சிறப்பாகக் கூறும்.

- முனைவர் கா.ஆபத்துக்காத்தபிள்ளை

அத்தகையோர் தங்களைப் பாடுவதைப் பெரும்பேறாக மன்னர்கள் கருதினர்; புலவரால் பாடப்பெற்றால் வீடுபேறு கிட்டும் என நம்பினர். 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப (புறம் 24-28) என்ற பாடல் வரிகளே அதற்குச் சான்றாகும். புலவர் பிசிராந்தையார் யாண்டு பலவாக நரையின்றி வாழ்நற்கு கூறும் பல காரணங்களுள் 'ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' (புறம். 191 வரி 6-7) என்பதை தலையாயக் காரணமாகக் கூறுவார். சான்றோர் பெருமையை இது உணர்த்தும். இத்தகு சான்றோருள் ஒருவராகத் திகழ்ந்தவர் கோவூர்கிழார் எனும் புலவர் பெருமகனார்.

அவர் காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் தமிழகத்தைத் தங்களுக்கே உரிமையானது என்ற தன்னல உணர்வுகொண்டு வாழ்ந்தனர். சிலசமயம் ஒரே குலத்தவரே தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதும் உண்டு. அவ்வகையில் சோழன் நலங்கிள்ளியையும் சோழன் நெடுங்கிள்ளியையும் குறிக்கலாம். இருவரும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டனர். அவர்களை அமைதிப்படுத்தி உயிர்களைச் சாவிலிருந்து மீட்க புலவர் கோவூர்கிழார் அம்மன்னர்களிடம் சென்று நாட்டில் அமைதி ஏற்படுத்த முனைந்ததைப் புறநானூறு 44 மற்றும் 45-ஆம் பாடல்களில் அறிய முடிகிறது.

FLERE HISTORIER FRA Dinamani Villupuram

Dinamani Villupuram

ஆளுநர் மாளிகை முன் அடுத்தடுத்து போராட்டம்: தவெகவினர் கைது

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன் வெள்ளிக் கிழமை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தி னர் கைது செய்யப்பட்ட னர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகியுள்ள நிலையில், அதனால் மாணவர்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி, மாணவர் தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப் பேட்டை குப்பநத்தத்தை சேர்ந்த மாணவர் மௌனிஷ் ஆகிய இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.

time to read

2 mins

May 09, 2026

Dinamani Villupuram

திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

உறவினர்கள் சாலை மறியல்

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் வாழ்த்து

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

தங்கம் பவுன் ரூ.1,13,200

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை

ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Translate

Share

-
+

Change font size