Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் பொறுப்பற்ற செயல்: ரஷியா, சீனா கண்டனம்

Dinamani Villupuram

|

June 23, 2025

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் பொறுப்பற்ற செயல் என்று ரஷியாவும், மேற்காசியாவில் நிலையை மேலும் மோசமாக்கும் என சீனாவும் கண்டனம் தெரிவித்தன.

மாஸ்கோ/பெய்ஜிங், ஜூன் 22:

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டதாவது: ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சர்வதேச விதிகள், ஐ.நா. பிரகடனம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் ஆகியவற்றை மீறிய சகித்துக் கொள்ள முடியாத நடவடிக்கை. ஒரு நாட்டின் இறையாண்மையை மீறி ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசுவது என்பது மிகவும் பொறுப்பற்ற செயல்பாடு.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ஒரு நாடு இத்தகைய செயலில் இறங்கியிருப்பது அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது. இதுபோன்ற செயல்பாடுகளை அனைவரும் இணைந்து நிராகரிக்க வேண்டும். இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தாக்குதலால் அணுக்கதிர் வீச்சு அபாயம் வரை ஏற்படும். ஏற்கெனவே மிகவும் மோசமான தாக்குதல்களால் மோதல்போக்கு அதிகரித்து வருகிறது. இப்போது அந்த பிராத்தியத்துக்கு மட்டுமன்றி உலகின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உருவாகிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.

இதில் ஓரிடத்தில்கூட அமெரிக்காவின் பெயரை ரஷியா நேரடியாகக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘டிரம்ப்புடன் புதின் பேசமாட்டார்’: ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சு நடத்தும் திட்டம் எதுவும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு இல்லை என்று ரஷிய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் இல்லமான கிரெம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோ இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், ‘அமெரிக்க அதிபருடன் புதின் பேச்சு நடத்தும் திட்டம் ஏதுமில்லை. தேவை ஏற்பட்டால் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்’ என்றார்.

FLERE HISTORIER FRA Dinamani Villupuram

Dinamani Villupuram

தென்னாப்பிரிக்காவை மீட்ட முத்துசாமி, ரபாடா

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் சேர்த்து புதன்கிழமை ஆட்டமிழந்தது.

time to read

1 min

October 23, 2025

Dinamani Villupuram

முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி

இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.

time to read

1 min

October 23, 2025

Dinamani Villupuram

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.20 கோடி இழப்பு: ஊழல் ஒழிப்புத் துறை வழக்கு

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணிகளால் அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டதாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

time to read

1 mins

October 23, 2025

Dinamani Villupuram

சென்னை, 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

October 23, 2025

Dinamani Villupuram

Dinamani Villupuram

புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு

புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

time to read

1 mins

October 23, 2025

Dinamani Villupuram

இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?

அடிலெய்டு, அக். 22: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.

time to read

1 min

October 23, 2025

Dinamani Villupuram

'சென்னை ரன்ஸ்' ஜெர்ஸி அறிமுகம்

சென்னையில் எம் ஆர்டி1 நடத்தும் சார்ஜ் பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டிக்கான அதிகாரபூர்வ ஜெர்ஸியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

time to read

1 min

October 23, 2025

Dinamani Villupuram

இந்திய ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன்

தென்னாப்பிரிக்க'ஏ' அணிக்கு எதிரான சிவப்புப் பந்து தொடரில் விளையாடவிருக்கும் இந்திய 'ஏ' அணியின் கேப்டனாக, விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஷப் பந்த் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

October 22, 2025

Dinamani Villupuram

Dinamani Villupuram

நிகழாண்டில் 7-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

மேட்டூர் அணை நிகழாண்டு 7 ஆவது முறையாக திங்கள்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,500 கன அடியாக உள்ளதால் 40 நாள்களுக்குப் பிறகு உபரிநீர்ப்போக்கிகள் வழியாக 22,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

time to read

1 min

October 22, 2025

Dinamani Villupuram

Dinamani Villupuram

புதிய தலைமை மலர்கிறது!

காந்தியம் தேங்காத நீரோடை; காந்தியர்கள் தேங்குவார்கள்; காந்தியம் தேங்காது. அதற்கான தலைமை இருந்தால் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். நாம் இன்று களத்தில் புதுமைக் காந்தியர்களை மக்களுடன் செயல்பாட்டில் பார்க்கிறோம். அது நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் பணிகள் என்னென்ன? இவர்கள் சாதாரண இளைஞர்கள்தான்; வெளிநாட்டிலிருந்து வரவில்லை.

time to read

3 mins

October 22, 2025

Translate

Share

-
+

Change font size