Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

வரலாறு மன்னிக்காது!

Dinamani Tiruvarur

|

August 11, 2025

இந்தியா, ரஷியா பொருளாதாரம் சிதைந்து போய்விட்டால், இரு நாடுகளின் பொருளாதார வளம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதற்கான இந்த மிரட்டல் போக்கில் டிரம்ப் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் 140 கோடி மக்களும் விழிப்போடு எதிர்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைக்கான நமது நிலை.

ஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது இந்தியப் பொருள்களின் மீது 25% வரி விதித்திருக்கிறார்.

ஏற்கெனவே, ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களிடம் தங்களின் தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிறுவக் கூடாது என எச்சரித்து வந்த டிரம்ப், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கும், உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுக ஆதரவு வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை இந்தியா நிறுத்தா விட்டால், வரியை மேலும் அதிகரிப்பேன் என்று டிரம்ப் கூறிவந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திலேயே இந்தியா மீதான வரியை மேலும் 25% உயர்த்தி, 50% அதிகரித்திருக்கிறார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வருவதால், அதற்கு அபராதமாக இந்த 25% வரியை உயர்த்தியிருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த அபராத வரி விதிப்பு அடுத்த 21 நாள்களில் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவால் 50% வரி விதிப்புக்கு உள்ளான நாடாக இருக்கிறது இந்தியா.

ஒரு நாடு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது அந்நாட்டின் உரிமை. அதை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கை நியாயமற்றது; காரணமற்றது.

ரஷியாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குகிறோம்; ஆனால், ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இதற்கு உக்ரைன் மீதான போர்தான் முக்கியக் காரணம். நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 36% முதல் 38% வரை ரஷியாதான் நிறைவு செய்கிறது.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் கூறிவந்த நிலையில், இந்தியா அதை ஏற்கவில்லை. தேச நலன்தான் முக்கியம் என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruvarur

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Tiruvarur

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Dinamani Tiruvarur

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruvarur

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Tiruvarur

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா: அரசு வழிமொழியத் தயார்

பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு வழிமொழி யத் தயாராக இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

October 31, 2025

Dinamani Tiruvarur

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruvarur

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Tiruvarur

கர்நாடக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruvarur

அன்பின் வழியது உயிர்நிலை

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

time to read

2 mins

October 30, 2025

Translate

Share

-
+

Change font size