Prøve GULL - Gratis
மக்களாட்சியின் தாய் இந்தியா!
Dinamani Tiruvannamalai
|August 06, 2025
இந்தியாவின் மக்களாட்சி கடன் வாங்கப்பட்ட ஆடை அல்ல என்று நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். அது கூட்டாக முடிவு எடுக்கும் பூர்விக பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளதுடன், நீதிநெறி, சமத்துவம், குடிமக்களின் பங்கேற்பு ஆகிய விழுமியங்களில் நங்கூரமிட்டுள்ளது.
கடந்த ஜூலை 27-ஆம் தேதி பண்டைய கோயில் நகரமான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வந்தார். அரசனும், அவனின் ஆட்சியும் சட்டத்துக்கு மேலானது அல்ல என்று கடந்த 1215-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'மேக்னா கார்ட்டா' என்கிற பிரிட்டன் சாசனத்துக்கு முன்பே, அத்தகைய நடைமுறை இந்திய மக்களாட்சியில் இருந்ததாக பிரதமர் மோடி கூறினார். இதன்மூலம், மறந்துபோன வரலாற்று உண்மையை அவர் நினைவுபடுத்தினார்.
தனது பேச்சின்போது அவர் பெருமிதம் தெரிவித்த பண்டைய வாக்குப் பதிவு முறை என்பது என்ன? அது 1,000 ஆண்டுகளுக்கு முன்னர், சோழர்கள் ஆட்சியில், குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் வியக்கத்தக்க பாணியை விவரிக்கிறது. அதேவேளையில் பூர்விகமாகவும், தொன்மையாகவும், கடுமையான விதிமுறைகளையும் கொண்டிருந்த மக்களாட்சி மரபின் பெருமையை மீட்டெடுப்பதே அதில் உள்ள ஆழமான செய்தியாகும்.
இதுகுறித்து 10 ஆண்டுகளுக்கு முன்னர், 'அன் அன்டாக்குமென்டன்ட் வண்டர்-தி மேக்கிங் ஆஃப் தி கிரேட் இண்டியன் எலெக்ஷன் (2014)' என்ற எனது நூலில் நான் எழுதியிருந்தேன். மக்களாட்சிகோட்பாடு என்பது இந்தியாவுக்கு முற்றிலும் புதிதல்ல; கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அது இந்தியாவில் பல்வேறு வடிவங்களில் இருந்தது. சிறிய சமுதாயங்கள், கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் சமூகங்களில் விவாதங்கள் மூலம், முடிவு எடுப்பதில் பங்குகொள்வது இயல்பான வழக்கமாக இருந்தது.
கிராம சபைகளின் பங்கு குறித்தும், இந்தக் கட்டமைப்புகள் மூலம் எவ்வாறு நாட்டை மேலும் திறம்பட ஆட்சி செய்வது என்பதையும் கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் விவரித்துள்ளார். அந்தக் காலத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு சொத்து மற்றும் கல்வி முக்கியத் தகுதிகளாக கருதப்பட்டன. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஒருவர் ஊழலில் ஈடுபட்டதாகவோ, கறைபடிந்தவர்களாகவோ, ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டதாகவோ கருதப்பட்டால், அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
Denne historien er fra August 06, 2025-utgaven av Dinamani Tiruvannamalai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்
தற்சார்புதான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 mins
September 01, 2025
Dinamani Tiruvannamalai
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Tiruvannamalai
அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்
அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
கத்தாரில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
முதல்வர் உத்தரவு
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரி விதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு
தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tiruvannamalai
திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு
ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.
1 min
September 01, 2025
Translate
Change font size