Prøve GULL - Gratis

கவலையளிக்கும் மக்கள்தொகை பெருக்கம்!

Dinamani Tiruvannamalai

|

July 11, 2025

இந்தியாவில் 1872-இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு முன்னோடியாக இருந்தது. 1881 முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய நிர்வாகப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது

- உதயை மு. வீரையன்

உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2023-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 802 கோடி என்று ஐ.நா. அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

1400-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மிக விரைவான விகிதத்தில் உலக மக்கள்தொகை அதிகரிப்பு 1950-ஆம் ஆண்டுகளில் குறுகிய கால அளவிலும், அதன்பின்னர் 1960-1970-ஆம் ஆண்டுகளில் நீண்ட காலகட்டங்களிலுமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஆண்டுக்கு 5.7 கோடி மட்டும் என்ற நிலையில் உள்ள இறப்புகள் 2050-ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டுக்கு 9 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையை பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால், உலக மக்கள்தொகையானது 2050-ஆம் ஆண்டில் 800 கோடி முதல் 1,050 கோடி வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள்தொகை அதிகரிப்பால் புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவது பற்றி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இப்போதைய மக்கள்தொகை அதிகரிப்பும், அதனுடன் நிகழும் பயன்பாட்டு அதிகரிப்பும் பல வகைகளில் பாதிப்படைய வைக்கும் என்பதே அறிவியல் முடிவாகும்.

2025-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 809 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு விநாடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும், 2 பேர் இறப்பார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியாக இருக்கும். ஆகவே, அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். அடுத்த நிலையில் சீனா 142 கோடி மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும். அமெரிக்கா 34 கோடியாகவும், ரஷியா 14 கோடியாகவும் இருக்கும். இந்த புள்ளிவிவரங்கள் ஐ.நா. சபையின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

உலகில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திய நாடு இந்தியாவாகும். 1872-ஆம் ஆண்டு வைஸ்ராய் லார்ட் மேயோவின் கீழ் இது தொடங்கப்பட்டது. மேலும், 1881 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Tiruvannamalai

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruvannamalai

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruvannamalai

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Tiruvannamalai

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Tiruvannamalai

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruvannamalai

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Tiruvannamalai

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Translate

Share

-
+

Change font size