Prøve GULL - Gratis
வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல்
Dinamani Tiruvallur
|December 15, 2025
மார்கழி மாதம் இறை வழிபாட்டுக் கும் அகத் தூய்மைக்கும் உரிய உன் னதக் காலமாகக் கருதப்படுகிறது.
பனியும் குளிரும் சூழ்ந்த அதிகாலைப் பொழுது களில், உறக்கத்தைத் துறந்து விடியலுக்கு முன்பே விழித்தெழும் தமிழ் வீதிகள், இந்த மாதத்தின் தனித்துவமான அடையாளம்.உத்தராயணக் கால தொடக்கத்தைக் குறிக்கும் இந்த மாற்றத்தின்போது, வீட்டு வாசல்களில் வரையப்படும் கோலங்கள் வெறும் அரிசி மாவுச் சித்திரங்கள் மட்டு மல்ல; பக்தியையும் தாண்டி, கணிதமும், சூழலியலும், சமூக அறிவியலும் சங்க மிக்கும் வாழ்வியல் சூத்திரங்களாகக் கோலங்கள் திகழ்கின்றன.
மேலைநாட்டினர் இன்று வியந்து பேசும் 'காலை ஐந்து மணி மன்றம்' என்ற சுய முன்னேற்றக் கோட்பாட்டை, நம் தமிழ்ச் சமூகம் பல நூற்றாண்டுகளாகவே ஒரு வாழ் வியல் நெறியாகக் கடைப்பிடித்து வருகிறது.
'பிரம்ம முகூர்த்தம்' எனப் போற்றப் படும் அந்த அதிகாலைப் பொழுதில் விழித் தெழுவதன் அவசியத்தை அறிவியல் ரீதி யாகப் பார்த்தால், அந்நேரத்தில் வளிமண் டல மாசு குறைந்தும், ஆக்சிஜன் மற்றும் உயிர் அயனிகள் செறிந்து காணப்படுவதும் உடலுக்கும் மனதுக்கும் பெரும் புத்துணர்வை அளிக்கின்றன.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் துயிலெழுந்து, கோலமிடுதல் போன்ற கட மையைச் செய்யத் துணியும் அந்த மனத் திண்மை, வாழ்வில் விடாமுயற்சியைக் கற்ப தற்கான முதல் படியாகும். அந்த வகையில், அதிகாலையில் கோலமிடுதல் என்பது ஒரு நாளின் தொடக்கத்தை ஒழுக்கத்துடனும், நேர்மறை ஆற்றலுடனும் கட்டமைக்கும் ஒரு சிறந்த உளவியல் கரு வியாகத் திகழ்கிறது.
Denne historien er fra December 15, 2025-utgaven av Dinamani Tiruvallur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை
தில்லி தமிழ்நாடு இல்லத்துக்கு புதன்கிழமை பிற்பகலில் வருகை தந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
1 mins
May 28, 2026
Dinamani Tiruvallur
சிறுமி கொலை: இருவர் குண்டர் சட்டத்தில் கைது
கோவை அருகே சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
1 min
May 28, 2026
Dinamani Tiruvallur
தமிழகத்தில் மின் வெட்டு 80% குறைந்தது
மின் வாரிய அலுவலர்களின் தீவிர கண்காணிப்பு, சீரமைப்புப் பணிகளால் தமிழகத்தில் மின் வெட்டு சுமார் 80 சதவீதம் குறைந்துவிட்டது என எரிசக்தி வளம், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
1 min
May 28, 2026
Dinamani Tiruvallur
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2 mins
May 28, 2026
Dinamani Tiruvallur
பக்ரீத்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 mins
May 28, 2026
Dinamani Tiruvallur
இணையவழி ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்
பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 28, 2026
Dinamani Tiruvallur
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
1 min
May 28, 2026
Dinamani Tiruvallur
ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸார் மீதான வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 mins
May 28, 2026
Dinamani Tiruvallur
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.
1 min
May 28, 2026
Dinamani Tiruvallur
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Listen
Translate
Change font size

