Prøve GULL - Gratis

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு இல்லை

Dinamani Tiruvallur

|

November 21, 2025

மசோதா ஒப்புதல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விளக்கம்

- நமது நிருபர்

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு இல்லை

மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க மாநில ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நீதித் துறை காலக்கெடு நிர்ணயிப்பது பொருத்தமற்றது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை விளக்கமளித்தது.

அதேசமயம், மசோதாக்கள் மீது 'நிரந்தரமாக' முடிவெடுக்காமல் அப்படியே வைத்திருக்கும் 'கட்டுப்பாடற்ற' அதிகாரங்கள் ஆளுநருக்கு இல்லை என்று அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தியது.

தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் குறிப்பிட்ட காலவரம்புக்குள் முடிவு எடுக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

அதில், மசோதாக்கள் மீது உரிய முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதம்; அரசமைப்பின் 142-ஆவது பிரிவு அளித்துள்ள சிறப்பு அதிகாரத்தின்படி, தாமதிக்கப்பட்ட மசோதாக்கள் நிறைவேறியதாக கருதப்படும். பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

111 பக்க விளக்கம்: இந்தத் தீர்ப்பு குறித்து 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பினார். அதுகுறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து ஒருமனதாக வியாழக்கிழமை விளக்கமளித்தது. 111 பக்கங்கள் கொண்ட விளக்கத்தின் முக்கிய அம்சங்கள்: மசோதாக்கள் விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று தேர்வுகள் உள்ளன. முதலாவதாக, மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளிக்கலாம். இரண்டாவதாக, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். மூன்றாவதாக, அரசமைப்பின் 200-ஆவது பிரிவின்படி மசோதாவை நிறுத்தி வைத்து, அதை பேரவையின் மறு ஆய்வுக்கே திருப்பி அனுப்பலாம்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவர்: மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில் மருத்துவர்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மழை காரணமாக சென்னை மாவட்டத் தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிச.3) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித் தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் இரு அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை நேருக்குநேர் மோதியதில் ஓட்டுநர் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி' செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம்

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

time to read

1 min

December 03, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மக்கள் பணத்தில் பாபர் மசூதியை கட்ட நேரு விரும்பினார்

'மக்களின் பணத் தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நாட்டின் முதல் பிரத மரான ஜவாஹர்லால் நேரு விரும் பினார்; ஆனால் அவரது இத்திட் டம் வெற்றி பெற அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அனும திக்கவில்லை’ என்று மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

time to read

2 mins

December 03, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Listen

Translate

Share

-
+

Change font size