Prøve GULL - Gratis

உயிர்களிடத்தில் அன்பு வேணும்...

Dinamani Tiruvallur

|

June 19, 2025

எல்லா உயிரையும் தன்னுயிராகப் போற்றும் பெரும் பண்பைக் கற்றுத் தருகிறது தமிழ் மரபு. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலையே' நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாக்கினார் வள்ளுவர் பெருமான். 'பல்லுயிர் கொல்லுதல் அன்று' என்பதை நாம் உணர்ந்து கொண்டால் மானுடம் சிறக்கும்.

- முனைவர் அருணன் கபிலன்

உலகம் பரந்துபட்டது. அதில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது. நாம் கண்ணுக்குத் தெரிகிற உயிரினங்களை மட்டுமே நம்முடன் வாழ்வதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். நம்முடன் எத்தனையோ கோடிக்கணக்கான உயிரினங்கள் கண்ணுக்குத் தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மண்ணுக்கு வெளியிலும் மண்ணுக்கு உள்ளும் காற்றிலும் அவை கலந்து நிறைந்திருக்கின்றன.

மனிதர்களாகிய நாம் நமக்கிருக்கிற ஏகபோக உரிமையின் காரணமாக உரிமையாளர்கள்போல் இவ்வுலகத்தை நம் வசப்படுத்திக் கொண்டோம். ஆனால், பல உயிர்களின் துணையின்றி நாம் இந்த உலகத்தில் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து விட முடியாது. இதை நாம் அறிவினாலும் அறிய மறுக்கிறோம்; உணர்வினாலும் தெளிய மறுக்கிறோம்.

இந்த உலகத்தின் பெரும்பிரிவுகளாகத் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் ஆகிய உயிரினங்கள் விளங்குகின்றன. மனிதர்களாகிய நாம் உடலால் விலங்காகவும் அறிவினால் அதனினும் மேம்பட்ட உயிராகவும் திகழ்கிறோம். என்றாலும், ஏனைய அனைத்து உயிர்களோடும் இயைந்து வாழத்தான் முதலில் பழகிக் கொண்டோம்.

இன்னும் சரியாகச் சொல்வதானால், நம் வாழ்க்கை முறைகளையும் அறிவியல் நுட்பங்களையும் மற்ற உயிர்களிடமிருந்துதான் பெற்றுக் கொண்டோம். பறவைகளிடமிருந்து கூடுகட்டி வாழும் முறையில் தொடங்கி, அது பறப்பது போலவே நாமும் பறப்பதற்கு விமானம் தயாரிப்பது வரையிலும் பலவற்றைக் கற்றுக் கொண்டோம். இவையெல்லாம் புறக்கல்வி என்றால், அகக் கல்வியையும் இந்த உயிரினங்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளன.

இல்லறத்தையும் அதைப் பேணுகிற பெண்மையையும் எப்படிப் போற்றிக் காக்க வேண்டும் என்பதை இந்த உயிரினங்கள்தான் கற்றுத் தருகின்றன. இதைக் கலித்தொகையில் பெருங்கடுங்கோ உணர்த்திக்காட்டியிருக்கிறார்.

இல்லறத்தின் பெரும்பயனைத் துய்ப்பதற்குப் பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பாலைநிலத்து வழியில் பிரிந்து சென்றதை எண்ணித் தலைவி கலக்கம் அடைகிறாள். 'அந்தப் பாலை நிலம் கொடுமையானதாக இருக்குமே. தலைவனுக்கு ஊறு நேருமே, அது தனக்கும் துன்பமாக முடியுமே' என்று வருந்திய தலைவி, தோழியிடம் ஆறுதல் கூறித் தேற்றுகிறாள்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

நெடுஞ்சாலைகள் இணைப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

time to read

1 min

October 14, 2025

Dinamani Tiruvallur

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tiruvallur

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tiruvallur

பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர்கள் தேர்வு

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் மாநில துணைச் செயலர்களாக ந.பெரியசாமி, எம். ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tiruvallur

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.

time to read

2 mins

October 14, 2025

Dinamani Tiruvallur

சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tiruvallur

செப்டம்பரில் குறைந்தது சில்லறை பணவீக்கம்

காய்கறிகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருள்கள், பழங்கள், பயறு வகைகள், தானியங்கள், முட்டை, எரிபொருள் போன்றவற்றின் விலை குறைந்ததால், இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் செப்டம்பரில் 1.54 சதவீதமாக சரிந்துள்ளது. இது 2017 ஜூன் மாதத்துக்குப் பிந்தைய மிகக் குறைந்த பணவீக்கம்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இந்து சமய அறநிலையத் துறைக்கு 27 புதிய பணிகள்

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 27 புதிய திட்டப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பா?: புகார் எண்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து பயணிகள் புகார் தெரிவிக்க கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size