Facebook Pixel முற்பகல் செய்யின்... | Dinamani Tiruvallur - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

முற்பகல் செய்யின்...

Dinamani Tiruvallur

|

March 17, 2025

வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகருக்கு சுமார் 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் விரைவு ரயில் கடந்த மார்ச் 11-இல் புறப்பட்டது.

பெரோ குன்ரி என்ற இடத்துக்கு அருகே இந்த ரயில் சென்ற தண்டவாளத்தைக் குண்டு வைத்து தகர்த்த பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பயங்கரவாத அமைப்பினர், அந்த ரயிலுக்குள் ஏறி அதைக் கடத்தினர். பயணிகளை மீட்க பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள், 21 பயணிகள் என 58 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர்களில் 214 பயணிகளைக் கொன்றுவிட்டதாக பிஎல்ஏ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் ராணுவ நிலையின் மீது தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவர் உள்பட தெஹ்ரீக் ஏ தலிபான் அமைப்பினர் 10 பேர் வியாழக்கிழமை (மார்ச் 13) கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவது புதிது அல்ல. இருப்பினும் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் 748 பேர் உயிரிழந்தனர் என்றால், இந்த எண்ணிக்கை 2024-இல் 1,081-ஆக அதிகரித்துள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தியாகத்தின் உருவம் !

உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

மேக்கேதாட்டு அணை கூடாது

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஜூன் 25 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஜூன் 25 வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

தங்கம் பவுனுக்கு ரூ.3,040 குறைவு

ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனையானது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

விபி-ஜி ராம் ஜி திட்ட அமலாக்கம்: நாடு முழுவதும் 100 அதிகாரிகள்

விபி-ஜிராம் ஜி எனப்படும் வளர்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (125 நாள் வேலைத் திட்டம்) ஜூலை 1- ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்

time to read

1 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஈரான் - அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்

ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை இரவு கையொப்பமிடப்பட்டது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

மாஸ்கோ எண்ணெய் நிலையத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து, உக்ரைன் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.

time to read

1 min

June 19, 2026

Translate

Share

-
+

Change font size